சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பரவலாக பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதீத வெப்பம் சற்று தணிந்து குளுமை நிலவுவதால் மக்கள் குஷியாகியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வெயில் மட்டும் அல்லாமல் வெயிலோடு சேர்ந்து அனல் காற்றும் வீசி மக்களை வாட்டி எடுத்தது. இதனால் மக்கள் செய்வதறியாமல் தகித்து கொண்டிருந்தனர். ஐயோ கடவுளே இந்த வெயில் கொடுமையை தாங்க முடியவில்லையே. சூரிய பகவானே கொஞ்சம் கருணை காட்டுங்களேன் என மக்கள் புலம்பி தவித்து வந்தனர். இது ஒரு வேளை அவருக்கு கேட்ருச்சோ என்னவோ, மழையைப் பொழிவித்து மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளார் மிஸ்டர் வருண்!

கடந்த இரண்டு நாட்களாக வெயில் சற்று தணிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து விட்டு விட்டு ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. தாம்பரம், கொளத்தூர், நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. சில இடங்களில் லேசான கன மழையாகவும் இது இருந்தது.
மழை நீடிக்கும்- வானிலை மையம்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் சந்தோஷச் செய்தியைச் சொல்லியுள்ளது வானிலை மையம்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் குடிதாங்கி மற்றும் மதுரை மாவட்டம் சாத்தியாரில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் 3 செமீ மழையும், திருவள்ளூரில் 1.3 செமீ மழையும் சிதம்பரத்தில் 1.1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}