சென்னையில் காலையில் பரவலாக மழை.. வெகுவாக தணிந்த வெக்கை.. மக்கள் மகிழ்ச்சி!

May 09, 2024,10:54 AM IST

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை  பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பரவலாக பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதீத வெப்பம்  சற்று தணிந்து குளுமை நிலவுவதால் மக்கள் குஷியாகியுள்ளனர்.


கடந்த இரண்டு மாதங்களாக வெயில் மட்டும் அல்லாமல் வெயிலோடு சேர்ந்து அனல் காற்றும் வீசி மக்களை வாட்டி எடுத்தது. இதனால் மக்கள் செய்வதறியாமல் தகித்து கொண்டிருந்தனர். ஐயோ கடவுளே இந்த வெயில் கொடுமையை தாங்க முடியவில்லையே. சூரிய பகவானே கொஞ்சம் கருணை காட்டுங்களேன் என மக்கள் புலம்பி தவித்து வந்தனர். இது ஒரு வேளை அவருக்கு கேட்ருச்சோ என்னவோ, மழையைப் பொழிவித்து மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளார் மிஸ்டர் வருண்!




கடந்த இரண்டு நாட்களாக வெயில் சற்று தணிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து விட்டு விட்டு ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. தாம்பரம், கொளத்தூர், நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. சில இடங்களில் லேசான கன மழையாகவும் இது இருந்தது.


மழை நீடிக்கும்- வானிலை மையம்


சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் சந்தோஷச் செய்தியைச் சொல்லியுள்ளது வானிலை மையம்.


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் குடிதாங்கி மற்றும் மதுரை மாவட்டம் சாத்தியாரில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் 3 செமீ மழையும், திருவள்ளூரில் 1.3 செமீ மழையும் சிதம்பரத்தில் 1.1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அண்ணாமலையார் அருளால் மீண்டும் எம்எல்ஏ ஆகனும்.. திருவண்ணாமலைக்கு வந்த ரோஜா!

news

ஓய்வு பெறுவது குறித்து.. இன்னும் முடிவெடுக்கவில்லை தோனி.. வெளியான தகவல்.. ரசிகர்கள் செம ஹேப்பி!

news

வாரத்தின் முதல் நாளிலேயே அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. ரூ. 55,000ஐ கடந்தது தங்கம்!

news

சித்த வைத்தியம் முதல் பாட்டி வைத்தியம் வரை.. தவிர்க்க முடியாத கிராம்பு.. எவ்வளவு நல்லது தெரியுமா?

news

பாஜகவுக்கு 8 முறை ஓட்டு போட்டு அதிர வைத்த உ.பி. சிறுவன்.. புகாருக்குப் பிறகு கைது!

news

அடுத்த 5 ஆண்டுக்கு அல்ல.. 1000 வருடத்துக்கு திட்டம் தீட்டுகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

news

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய.. ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மரணமடைந்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

அறுதப் பழசான ஹெலிகாப்டரில் பயணித்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி.. அதிர வைக்கும் தகவல்கள்!

news

மே 20 - சந்தோஷம் தரும் வைகாசி சோமவார பிரதோஷம்

அதிகம் பார்க்கும் செய்திகள்