சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பரவலாக பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதீத வெப்பம் சற்று தணிந்து குளுமை நிலவுவதால் மக்கள் குஷியாகியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வெயில் மட்டும் அல்லாமல் வெயிலோடு சேர்ந்து அனல் காற்றும் வீசி மக்களை வாட்டி எடுத்தது. இதனால் மக்கள் செய்வதறியாமல் தகித்து கொண்டிருந்தனர். ஐயோ கடவுளே இந்த வெயில் கொடுமையை தாங்க முடியவில்லையே. சூரிய பகவானே கொஞ்சம் கருணை காட்டுங்களேன் என மக்கள் புலம்பி தவித்து வந்தனர். இது ஒரு வேளை அவருக்கு கேட்ருச்சோ என்னவோ, மழையைப் பொழிவித்து மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளார் மிஸ்டர் வருண்!
கடந்த இரண்டு நாட்களாக வெயில் சற்று தணிந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலையிலிருந்து விட்டு விட்டு ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. தாம்பரம், கொளத்தூர், நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. சில இடங்களில் லேசான கன மழையாகவும் இது இருந்தது.
மழை நீடிக்கும்- வானிலை மையம்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமானது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் சந்தோஷச் செய்தியைச் சொல்லியுள்ளது வானிலை மையம்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் குடிதாங்கி மற்றும் மதுரை மாவட்டம் சாத்தியாரில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் 3 செமீ மழையும், திருவள்ளூரில் 1.3 செமீ மழையும் சிதம்பரத்தில் 1.1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
பிரித்து மேய்ந்த பிரேவிஸ்.. சொதப்பிய கேப்டன் தோனி.. பெரிய ஸ்கோரை எட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}