சென்னை: விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டதற்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தற்கொலை என்பது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளரும் ஆன விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரா நன்றாக படிக்கக் கூடியவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், சுட்டித்தனமும் மிக்கவர். இவர் எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று அனைத்து தரப்பினரும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
மீரா மறைவு குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. திரைத்துறையினரும் இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. மன அழுத்தம், மன உளைச்சல் தொடர்பான விவாதங்களும் சூடு பிடித்துள்ளன.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் மீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது கவிதை:
கொலை என்பது
மனிதன் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
தற்கொலை என்பது
சமூகத்தின் மீது
மனிதன் காட்டும் எதிர்ப்பு
விஜய் ஆண்டனி
மகளின் தற்கொலை
சமூகத்தை எந்தப் புள்ளியில்
எதிர்க்கிறது என்பதைக்
கண்டறிந்து களைய வேண்டும்
ஒரு பூ
கிளையிலேயே
தூக்கிட்டுக் கொள்வது
எத்துணை பெரிய சோகம்
வருந்துகிறேன்
ஒரு குடும்பத்தின்
சோகத்தைப் பங்கிட்டு
என் தோளிலும்
ஏற்றிக்கொள்கிறேன்.
என்று அவர் இரங்கல் கவிதையை சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி மகள் மீரா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்கு பொதுமக்களும், திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மீராவின் இறுதி சடங்குகள் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}