சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை மழை 32 சதவீதம் குறைவாகவ பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் வெயில் காலம் என்றால் மே மாதம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தான் வெயில் வெளுக்கும். அதற்கு மாறாக இந்த வருடம் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதோடு வெப்ப அலை தாக்கமும் அதிகமாக இருந்தது.
இதனால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக
கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள், விவசாயிகள், வெயில் தாக்கத்திலிருந்து தப்பித்து குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.

இருப்பினும் கோடை மழை இந்த வருடம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இன்று காலை வரையிலான காலகட்டத்தில் இதுவரை 65 மில்லி மீட்டர் அளவிலான மழையே பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 94.9மி.மீ மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் இயல்பை விட 32 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோடை மழையின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வறண்டு போய் கிடக்கும் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகளுக்கு நீர் வரத்து இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}