சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை மழை 32 சதவீதம் குறைவாகவ பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் வெயில் காலம் என்றால் மே மாதம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தான் வெயில் வெளுக்கும். அதற்கு மாறாக இந்த வருடம் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதோடு வெப்ப அலை தாக்கமும் அதிகமாக இருந்தது.
இதனால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக
கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள், விவசாயிகள், வெயில் தாக்கத்திலிருந்து தப்பித்து குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.
இருப்பினும் கோடை மழை இந்த வருடம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இன்று காலை வரையிலான காலகட்டத்தில் இதுவரை 65 மில்லி மீட்டர் அளவிலான மழையே பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 94.9மி.மீ மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் இயல்பை விட 32 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோடை மழையின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வறண்டு போய் கிடக்கும் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகளுக்கு நீர் வரத்து இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}