பத்தலை பத்தலை.. தமிழ்நாட்டில்.. இந்த வருடம்.. கோடைமழை.. இயல்பை விட 32% கம்மிதான்!

May 16, 2024,06:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை மழை 32 சதவீதம் குறைவாகவ பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


ஒவ்வொரு வருடமும் வெயில் காலம் என்றால் மே மாதம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தான் வெயில் வெளுக்கும். அதற்கு மாறாக இந்த வருடம் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதோடு வெப்ப அலை தாக்கமும் அதிகமாக இருந்தது. 


இதனால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக 

கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள், விவசாயிகள், வெயில் தாக்கத்திலிருந்து தப்பித்து குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர். 




இருப்பினும் கோடை மழை இந்த வருடம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இன்று காலை வரையிலான காலகட்டத்தில் இதுவரை 65 மில்லி மீட்டர் அளவிலான மழையே பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 94.9மி.மீ  மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் இயல்பை விட 32 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.


தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோடை மழையின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம்  வறண்டு போய் கிடக்கும் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகளுக்கு நீர் வரத்து இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short Story: புதுமைப்பெண்!

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்