சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை மழை 32 சதவீதம் குறைவாகவ பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் வெயில் காலம் என்றால் மே மாதம் அக்னி நட்சத்திர காலகட்டத்தில் தான் வெயில் வெளுக்கும். அதற்கு மாறாக இந்த வருடம் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. அதோடு வெப்ப அலை தாக்கமும் அதிகமாக இருந்தது.
இதனால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக
கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள், விவசாயிகள், வெயில் தாக்கத்திலிருந்து தப்பித்து குளிர்ச்சியை அனுபவித்து வருகின்றனர்.
இருப்பினும் கோடை மழை இந்த வருடம் குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இன்று காலை வரையிலான காலகட்டத்தில் இதுவரை 65 மில்லி மீட்டர் அளவிலான மழையே பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 94.9மி.மீ மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் இயல்பை விட 32 சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோடை மழையின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வறண்டு போய் கிடக்கும் ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகளுக்கு நீர் வரத்து இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}