மும்பை: இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியை தனது மனைவி லதா ரஜினிகாந்த், மைத்துனர் ரவி ராகவேந்தர் ஆகியோருடன் நேரில் பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தியா நியூசிலாந்து அரை இறுதிக் கிரிக்கெட் போட்டியை இன்று ஏகப்பட்ட பிரபலங்கள் நேரில் வந்து பார்த்து ரசித்தனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் போட்டியைக் காண குவிந்திருந்தனர். அதேபோல நம்ம ஊர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் நேரில் சென்று போட்டியைப் பார்த்து ரசித்தார்.

ரஜினிகாந்த்துடன், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மைத்துனர் ரவி ராகவேந்தர் (இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை) ஆகியோரும் போட்டியைக் காண வந்திருந்தனர். இந்தியாவின் அதிரடி பேட்டிங்கைக் கண்டு மகிழ்ந்து கை தட்டி ரசித்துப் பார்த்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் செம பிசியாக இருந்து வருகிறார். ஜெயிலர் படத்தை முடித்த கையோடு அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இடை இடையே பிற நடிகர்களின் படங்களையும் பார்த்து பாராட்டுகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்து ரசித்ததோடு மட்டுமல்லாமல் நீண்டதொரு கடிதத்தையும் அந்தக் குழுவுக்கு அனுப்பி மகிழ வைத்தார். கூடவே டீமையும் அழைத்துப் பாராட்டிப் பேசினார். ஒவ்வொருவருடனும் தனித் தனியாக போட்டோவும் எடுத்துக் கொண்டு மகிழ்வித்தார்.
நேற்று விடுவிடுவென மும்பைக்குக் கிளம்பி வந்து இன்று போட்டியைப் பார்த்து மகிழ்கிறார். சூப்பர் ஸ்டார்னா சும்மாவா... சும்மா கலக்குறாருல்ல!
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}