சூரத்: நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் சூரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முகேஷ் தலால் என்பவர் போட்டியின்றி தேர்வாகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட மனு செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர், அவரது டம்மி வேட்பாளர் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் 8 சுயேச்சைகளும் ஒட்டுமொத்தமாக தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதால் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிறார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸுக்கு எதிராக குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கையெழுத்திட்டிருந்தவர்களை கடத்திக் கொண்டு போய் விட்டது பாஜக. இந்த வெற்றி சத்தியத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளது.

சூரத் தொகுதியில், காங்கிரஸ் சார்பில் நிலேஷ் கும்பானி என்பவர் வேட்பு மனு செய்திருந்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக சுரேஷ் பட்சாலா என்பவர் மனு செய்திருந்தார். மேலும் 8 சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களில் இடம் பெற்றிருந்த கையெழுத்துக்கள் சரியாக இல்லை என்று கூறி அவற்றை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையில் திடீரென 8 சுயேச்சை வேட்பாளர்களும் ஒட்டுமொத்தமாக மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் பாஜக வேட்பாளர் மட்டும் தற்போது களத்தில் உள்ளார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.
சூரத் எம்.பியாக போட்டியின்றி தேர்வாகும் தலால், சூரத் மாநகராட்சியில் நிலைக்குழு தலைவராக இருந்தவர். தற்போது சூரத் நகர பாஜக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
சூரத்தில் பாஜக வெற்றி பெற்ற விதத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறுக்கு வழியில் வந்த வெற்றி என்று அது வர்ணித்துள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}