திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதுரையைச் சேர்ந்த ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும் என்று திருச்சி பாஜக பிரமுகர் சூர்யா சிவா பகிரங்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில், லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையில் வலுவான அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, ஜான்பாண்டியன் கட்சி, ஓபிஎஸ், டிடிவி தினகரனின் அமுமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சரத்குமார் தனது கட்சியையே இதில் கொண்டு வந்து சேர்த்து விட்டார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆளுநராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது அந்த பதவியை உதறிவிட்டு பாஜகவில் இன்று இணைந்தார். அவருக்கு அண்ணாமலை உறுப்பினர் அட்டையை கொடுத்து வரவேற்றார்.
இந்த நிலையில் திருச்சியில் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. திருச்சியில் மதுரையைச் சேர்ந்த மாநிலத் துணைத் தலைவர் ராம சீனிவாசனை வேட்பாளராக அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும் திருச்சி பாஜகவின் முக்கிய பிரமுகருமான சூர்யா சிவா கடும் ஆட்சியபனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் மண்ணின் மைந்தரை களம் இறக்குங்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக திருச்சி பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சூர்யா சிவா தீவிர அண்ணாமலை ஆதரவாளர். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் ராம சீனிவாசனுக்கு எதிராக கொடி தூக்கியிருப்பது பாஜகவினரை அதிர வைத்துள்ளது. ராம சீனிவாசன் வேட்பாளராக களம் இறக்கப்படுவாரா அல்லது அவருக்கு பதில் உள்ளூரைச் சேர்ந்த வேறு யாராவது நிறுத்தப்படுவார்களா? அல்லது சூர்யா சிவாவே வேட்பாளர் ஆக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}