அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கி விட்டது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அகமதாபாத்தில் உள்ள பிரமாண்டமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை அமரக் கூடிய மிகப் பெரிய ஸ்டேடியம் இது. இந்த ஸ்டேடியத்தில் இந்தியா இறுதிப் போட்டியில் ஆடவுள்ளதால் ஒட்டுமொத்த தேசமும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. அகமதாபாத் ரசிகர்களோ பெரும் உற்சாகத்தில் உள்ளனர். அகமதாபாத் நகரமே திருவிழா உணர்வுடன் இருக்கிறது.
இறுதிப் போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி நேரில் வரவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் போட்டி குறித்த எதிர்பார்ப்பு பரபரப்பாகியுள்ளது. இந்த நிலையில் இன்னொரு விசேஷமும் அங்கு அரங்கேறவுள்ளது.
அதாவது போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ரசிகர்களை அண்ணாந்து பார்த்து அதிசயிக்க வைக்கப் போகிறார்கள்.. இந்திய விமானப்படையின் சூரியகிரண் விமான சாகசக் குழுவினர் வானில் சாகச நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 10 நிமிடம் வரை இந்த சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.
வழக்கமாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற சமயங்களில்தான் இதுபோன்ற விமான சாசக நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த முறை உலகக் கோப்பைப் போட்டித் தொடர் பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளதால், ரசிகர்களின் மகிழ்ச்சியுடன் தங்களையும் இணைத்துக் கொள்ள விமானப்படை முடிவு செய்துள்ளது. அதன் விளைவுதான் சூரியகிரண் விமான சாகசம்.
போட்டி நடைபெறும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் மேலே வானில் சூரியகிரண் குழுவினர் சாகச நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மேலும் திரில்லைக் கூட்டியுள்ளது. மேலும் என்னெல்லாம் சர்ப்பிரைஸ் காத்திருக்கிறதோ.. பொறுத்திருந்து பார்ப்போம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}