சென்னை: நடிகரும், பாஜக வைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் போட்டுள்ள டிவீட்டால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர். சரமாரியாக அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்தவரான நடிகர் எஸ்.வி.சேகர் தற்போது தீவிரமான அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக அண்ணாமலை தலைவரான பிறகு பலரும் கூட ஒதுங்கி விட்டனர். அதில் எஸ்.வி.சேகரும் ஒருவர்.
எஸ்.வி.சேகர் நகைச்சுவையில் மன்னன். அவர் போடும் நாடகங்களில் இடம் பெறும் "தமாஷ் துனுக்குகள்" போலவே அவரது டிவீட்டும், அவரது பேச்சும், கருத்திலும் நகைச்சுவை தெறித்து வெடிக்கும். அந்த வகையில் சமீப காலமாக அவர் போட்டு வரும் டிவீட்டுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயக்குமாரை நேரில் சந்தித்து அதுகுறித்து ஒரு டிவீட் போட்டார் எஸ்.வி.சேகர். அதில்"உண்மையான சிங்கம்"என்று அவர் கேப்ஷன் போட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் சிங்கம் என்று செல்லமாக அழைப்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு , ஒரு மீம் போட்டிருந்தார். அதில், பரோட்டா மாஸ்டருக்கு என்ன கோவம்.. நான் பரோட்டா போட வரவில்லை. கல்லாலதான் உட்காருவேன்னு அடம்.. அப்புறம்.. அவருக்கு முன்னாடி வேலைக்கு சேந்தவங்க, சாப்பிட வந்தவங்க எல்லோரும் எதுத்த ஹோட்டலுக்குப் போயிட்டாங்க என்று இடம் பெற்றிருந்தது.. இதுவும் சர்ச்சையானது. காரணம், "நான் இட்லி, தோசை சுடுவதற்காக பாஜக தலைவராகவில்லை" என்று அண்ணாமலை பேசியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இன்னொரு டிவீட்டைப் போட்டு அண்ணாமலை ரசிகர்களை கொந்தளிக்க வைத்து விட்டார் எஸ்.வி.சேகர்.. அந்த டிவீட்டில் இப்படி உள்ளது.
"தம்பி ஆபீஸ் போகலியா"
"எதுத்த வீட்டு பையன் பக்கத்து வீட்டு பையன் ஆபீஸ் போறாங்களா? நானும் வீட்டுலயே வேலை செய்வேன்".
"அட மண்டு அவங்க கம்பெனி முதலாளி. நீ வெறும் பிரான்ச் மேனேஜர் 24 வரைக்கும் உன்னை வேலயில வச்சிருப்பாங்களான்னே தெரியலை. இனிமே பழைய வேலைக்கும் போகமுடியாது. கிளம்பு"!
இதில் மண்டு என்று யாரைச் சொல்கிறார்.. "24" என்று எதைச் சொல்கிறார்.. "பழைய வேலை"என்று எதைச் சொல்கிறார்... என்று "சத்தியமாக" நமக்கு தெரியவே தெரியைலங்க.. உங்களுக்கு ஏதாவது புரியுதா!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}