புயல் மழையால்.. திருப்பதியில் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம்.. பக்தர்கள் செம ஹேப்பி

Dec 02, 2024,04:54 PM IST

திருப்பதி: தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளது. இதனால், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், இங்கு பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். தற்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருவதால் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. 


 


ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டைய மாநிலஙகளிலும் அதன் கோர தாண்டவத்தை காண்பித்து தான் வருகின்றது. இந்த புயல் மற்றும் கன மழை காரணமாக ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மலைச்சரிவுகளில் மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்தும் இதனால் பரவலாக அனைத்து இடங்களிலும் பதிப்பை ஏற்படுத்தி வருகிறது.


திருப்பதியில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் தரிசனம் செய்து வருகின்றனர். மழையால் திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. மலைப் பாதையில் செல்லும் இடங்களில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. மேகக் கூட்டங்களால் திருப்பதி மலை ரம்மியமாக காட்சியளிக்கிறது.

 

தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. இதனால் நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். பல நாட்கள் தங்கியும், பல மணி நேரம் காத்திருந்து வந்த பக்தர்கள் தற்போது புயல் மழை காரணமாக 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்