திருப்பதி: தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளது. இதனால், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், இங்கு பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். தற்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருவதால் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டைய மாநிலஙகளிலும் அதன் கோர தாண்டவத்தை காண்பித்து தான் வருகின்றது. இந்த புயல் மற்றும் கன மழை காரணமாக ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மலைச்சரிவுகளில் மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்தும் இதனால் பரவலாக அனைத்து இடங்களிலும் பதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருப்பதியில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் தரிசனம் செய்து வருகின்றனர். மழையால் திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. மலைப் பாதையில் செல்லும் இடங்களில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. மேகக் கூட்டங்களால் திருப்பதி மலை ரம்மியமாக காட்சியளிக்கிறது.
தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. இதனால் நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். பல நாட்கள் தங்கியும், பல மணி நேரம் காத்திருந்து வந்த பக்தர்கள் தற்போது புயல் மழை காரணமாக 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}