புயல் மழையால்.. திருப்பதியில் 1 மணி நேரத்தில் சாமி தரிசனம்.. பக்தர்கள் செம ஹேப்பி

Dec 02, 2024,04:54 PM IST

திருப்பதி: தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளது. இதனால், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், இங்கு பக்தர்கள் கூட்டம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். தற்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருவதால் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. 


 


ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் மட்டுமின்றி அண்டைய மாநிலஙகளிலும் அதன் கோர தாண்டவத்தை காண்பித்து தான் வருகின்றது. இந்த புயல் மற்றும் கன மழை காரணமாக ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மலைச்சரிவுகளில் மண் சரிவும் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்தும் இதனால் பரவலாக அனைத்து இடங்களிலும் பதிப்பை ஏற்படுத்தி வருகிறது.


திருப்பதியில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் தரிசனம் செய்து வருகின்றனர். மழையால் திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. மலைப் பாதையில் செல்லும் இடங்களில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. மேகக் கூட்டங்களால் திருப்பதி மலை ரம்மியமாக காட்சியளிக்கிறது.

 

தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. இதனால் நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆனால், இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். பல நாட்கள் தங்கியும், பல மணி நேரம் காத்திருந்து வந்த பக்தர்கள் தற்போது புயல் மழை காரணமாக 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்