டெல்லி: ஸ்விக்கி நிறுவனம் 400 ஊழியர்கள் வரை வேலையை விட்டு நீக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் ஸ்விக்கி ஊழியர்களிடையே அதிர்ச்சி அலைகள் பரவி வருகின்றன.
வருடம் பிறந்ததும் ஒவ்வொரு நிறுவனமாக வேலையை விட்டு ஆட்களை நீக்குவது வழக்கமாக்கி வருகின்றன. கூகுள் நிறுவனம் கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருஷமும் வேலை நீக்கம் இருக்கும் என்று சுந்தர் பிச்சை சொல்லி விட்டார். கூகுளே ஆரம்பித்து வைத்திருப்பதால் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்களும் இந்த வேலையைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுமார் 400 பேரை வேலையை விட்டு நீக்க தீர்மானித்துள்ளதாம். கடந்த ஆண்டு 380 பேரை வேலையை விட்டு நீக்கியிருந்தது ஸ்விக்கி. அதேபோல இந்த ஆண்டும் ஆட்குறைப்பில் ஸ்விக்கி இறங்குகிறது.

செலவுக் குறைப்பு நடவடிக்கையாக தனது ஊழியர்களில் 7 சதவீதம் பேரை நீக்க ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தில் 6000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இந்த முறை தொழில்நுட்பப் பிரிவு, வாடிக்கையாளர் சேவை மற்றும் கார்ப்பரேட் பிரிவுகளில் ஆட் குறைப்பு இருக்கும் என்று தெரிகிறது.
ஆட்குறைப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் கூட எப்போது இது மேற்கொள்ளப்படும் என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு கூகுள், டிவிட்டர், அமேசான், ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், மெட்டா என பெரிய பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேருக்கு வேலை போனது என்பது நினைவிரு்கலாம். உலகம் முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜனவரியில் இதுவரை உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 7500 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}