- தி. மீரா
ஆறுகள் நாட்டின்
உயிரான நீர்நிலைகள்
ஆண்டவனின் கொடையில்
இதுவும் ஒன்று
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு பெயருடன்
ஒருங்கே அமைந்த
உருவமாய் ஆறுகள்
நீர்நிலைகளை கடல்
நதி ஆறு குளம்
குட்டை ஏரி
என்று பாகுபடுத்தி
காத்தனர் முன்னோர்கள்
காப்பாற்றினர் விவசாயம்
காவல் தெய்வமாய்
காலத்தைப் போற்றி
ஆடி மாதத்தில்
ஆறு நதி போன்றவற்றில்
நீராடி அவற்றை
பூஜித்தே வழிபட்டனர்
நீரின்றி உலகில்லை
ஆறுகளை போற்றி
ஆசையாய் காப்பாற்றி
ஆனந்தம் அடைவோம்

வாழ்வாதாரம் இதுவே
வாழ்க்கையின் பலமும்
ஆறுகளைப் போலே
வளைந்தும் சென்று
பூத்துக் குலுங்கும்
பூமியைக் காண்போம்.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
மெய்நட்பு!
பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!
நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!
சிந்தனைச் சிதறல்.. புன்னகை ஒன்றையே விதைத்திடுவார்!
வான் மழையும் காற்றும் தந்து வாழ்வு கொடுக்கும் மரங்களே!
Book Review - புத்தக விமர்சனம்.. திட்டம் 6
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்..!
உழைக்காத காசு!
எந்தன் முருகன்!
{{comments.comment}}