ஆறுகளை ஆராதிப்போம்

Aug 03, 2026,04:34 PM IST

- தி. மீரா


ஆறுகள் நாட்டின்

உயிரான நீர்நிலைகள்

ஆண்டவனின் கொடையில்

இதுவும் ஒன்று


ஒவ்வொரு இடத்திலும்

ஒவ்வொரு பெயருடன்

ஒருங்கே அமைந்த

உருவமாய் ஆறுகள்


நீர்நிலைகளை கடல்

நதி ஆறு குளம்

குட்டை  ஏரி

என்று பாகுபடுத்தி


காத்தனர் முன்னோர்கள்

காப்பாற்றினர் விவசாயம்

காவல் தெய்வமாய்

காலத்தைப் போற்றி


ஆடி மாதத்தில்

ஆறு நதி  போன்றவற்றில்

நீராடி அவற்றை

பூஜித்தே வழிபட்டனர்


நீரின்றி உலகில்லை

ஆறுகளை போற்றி

ஆசையாய் காப்பாற்றி

ஆனந்தம் அடைவோம்




வாழ்வாதாரம் இதுவே

வாழ்க்கையின் பலமும்

ஆறுகளைப் போலே

வளைந்தும் சென்று


புனிதம் காப்போம்

புவியை மீட்போம்

பூத்துக் குலுங்கும்

பூமியைக் காண்போம்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

அதிகம் பார்க்கும் செய்திகள்