மதுரை மீனாட்சி நகரின் காதல்!

Feb 14, 2026,05:10 PM IST

- தி.மீரா


மதுரையின் காலை எப்போதும் கோவில் மணி ஓசையாலும், தெரு தேநீர் வாசனையாலும் தொடங்கும். அந்த நகரில் வாழ்ந்தான் ஆதவன் — வரலாற்றைப் பிடிக்கும், அமைதியான இளைஞன்.


அதே பகுதியில் இருந்தாள் மரியம் — புத்தகங்களை நேசிக்கும், பிறருக்கு உதவ விரும்பும் பெண். இருவரும் மதுரை நூலகத்தில் அடிக்கடி சந்தித்தார்கள்.


முதலில் புத்தக பரிந்துரைகள், பிறகு படிப்பு உதவி, அதன் பின் நல்ல நட்பு.  ஒருநாள் மதுரைச் சித்திரை திருவிழா பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். ஆதவன் அந்த விழாவின் வரலாற்றை சொன்னான்.


மரியம் அதில் உள்ள ஒற்றுமை செய்தியைப் பகிர்ந்தாள். அவர்களுக்கு புரிந்தது  மதுரை போலவே, அவர்கள் மனங்களும் பல நிறங்கள் கொண்டவை என்று. நட்பு ஆழமான அன்பாக மாறியது. ஆனால் இருவரும் ஒரு முடிவு செய்தார்கள்: 




“முதலில் நம்ம குடும்பம் நிம்மதியாக இருக்கணும்.” அவர்கள் தங்கள் வீட்டில் திறந்த மனதுடன் பேசினார்கள்.

“நம்பிக்கைகள் வேறானாலும், மனசு நல்லதா இருந்தா போதும்,” என்றார்கள். 


குடும்பங்கள் நேரம் எடுத்துக் கொண்டன. ஆனால் அவர்கள் இருவரின் பண்பு, மரியாதை, பிறருக்கு உதவும் மனம் 

இவையே இறுதியில் பதில் சொன்னது. சிறிய விழாவில், இரு குடும்பங்களும் சேர்ந்தனர்.


யாரும் யாரின் நம்பிக்கையை மாற்றவில்லை; ஆனால் ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக்கொண்டனர். பின்னர் ஆதவன், மரியம் இருவரும் மதுரையில் ஏழை குழந்தைகளுக்கு இலவச படிப்பு மையம் தொடங்கினர். அவர்களின் அன்பு இரு இதயங்களை மட்டும் அல்ல, பல எதிர்காலங்களையும் இணைத்தது.


மதுரை கோபுரங்கள் வானத்தை தொட முயல்வது போல, அன்பு மனித மனங்களை இணைக்க முயலும்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!

news

Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!

news

Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!

news

Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!

news

பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!

news

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்

news

மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)

news

இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!

news

அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்