சென்னை: அரண்மனை 4 படத்தில் காட்சிகள் சவாலாக இருந்தாலும், மிகவும் ஜாலியா இருந்தது. அனைத்து சண்டை காட்சிகளிலும் நான் தான் நடித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக உள்ளது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
பேய் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படித்தான் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 பாகங்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் இரண்டு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 3வது பாகம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. 2014ம் வருடம் அரண்மனை 1 வெளியானது. இதில் ஆன்ட்ரியா, வினய் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டடித்தது.

அதைத் தொடர்ந்து 2016ல் அரண்மனை 2 படத்தை எடுத்தார் சுந்தர் .சி. அதில் நாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். இப்படமும் வசூலில் சாதனை படைத்தது. அதன் பின்னர் அரண்மனை 3ம் பாகம், 2021 ல் ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இந்த நிலையில் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தைக் கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி.
அரண்மனை 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுந்தர் சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாதான் அரண்மனை 4 படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை குஷ்புவின் அவிணி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி மற்றும் திகில் நிறைந்த கதை அம்சத்துடன் இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா கூறுகையில், அரண்மனை 4 படத்தில் நடிப்பது சவாலாக இருந்தாலும் மிகவும் ஜாலியா இருந்தது. அனைத்து சண்டை காட்சிகளிலும் நான்தான் நடித்தேன். இந்ந படத்தின் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமன்னா சண்டைக் காட்சியில் நடிப்பது போன்ற ஒரு சீனும், சாப்பிடுவது போன்ற காட்சியையும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார் தமன்னா.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}