அரண்மனை 4 .. செம சவாலா இருந்துச்சு.. வேடிக்கையாவும் இருந்துச்சு.. ஸ்டில்ஸ் வெளியிட்ட தமன்னா!

Apr 27, 2024,03:32 PM IST

சென்னை: அரண்மனை 4 படத்தில் காட்சிகள் சவாலாக இருந்தாலும், மிகவும் ஜாலியா இருந்தது. அனைத்து சண்டை காட்சிகளிலும் நான் தான் நடித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக உள்ளது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.


பேய் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படித்தான் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 பாகங்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் இரண்டு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 3வது பாகம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. 2014ம் வருடம் அரண்மனை 1 வெளியானது. இதில் ஆன்ட்ரியா, வினய் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டடித்தது.




அதைத் தொடர்ந்து 2016ல் அரண்மனை 2 படத்தை எடுத்தார் சுந்தர் .சி. அதில் நாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். இப்படமும் வசூலில் சாதனை படைத்தது. அதன் பின்னர் அரண்மனை 3ம் பாகம், 2021 ல் ஆர்யா, ராஷிகண்ணா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இந்த நிலையில் அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தைக் கையில் எடுத்துள்ளார் சுந்தர் சி.


அரண்மனை 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுந்தர் சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாதான் அரண்மனை 4 படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை குஷ்புவின் அவிணி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி மற்றும் திகில் நிறைந்த கதை அம்சத்துடன் இப்படம் வெளியாக உள்ளது. 




இப்படத்தின் பிடிஎஸ் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை தமன்னா கூறுகையில், அரண்மனை 4 படத்தில் நடிப்பது சவாலாக இருந்தாலும் மிகவும் ஜாலியா இருந்தது. அனைத்து சண்டை காட்சிகளிலும் நான்தான் நடித்தேன். இந்ந படத்தின் ஒரு பகுதியாக இருப்பது சந்தோஷமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.


தமன்னா சண்டைக் காட்சியில் நடிப்பது போன்ற ஒரு சீனும், சாப்பிடுவது போன்ற காட்சியையும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார் தமன்னா.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்