சென்னை: சென்னை நகரிலும், புறநகர்கள் பலவற்றிலும் இன்று பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
மின்சார பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்சார வயர்கள் சரியாக இருக்கின்றனவா, மரக் கிளைகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா என்பது உள்ளிட்டவை சரி பார்க்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மின்சார பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும். 2 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல்லாவரம், சோழிங்கநல்லலூர், அடையார், கிண்டி, போரூர், கே.கே.நகர், தாம்பரம், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியலையும் டான்ஜெட்கோ வெளியிட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}