சென்னை: சென்னை நகரிலும், புறநகர்கள் பலவற்றிலும் இன்று பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
மின்சார பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்சார வயர்கள் சரியாக இருக்கின்றனவா, மரக் கிளைகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா என்பது உள்ளிட்டவை சரி பார்க்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மின்சார பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும். 2 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல்லாவரம், சோழிங்கநல்லலூர், அடையார், கிண்டி, போரூர், கே.கே.நகர், தாம்பரம், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியலையும் டான்ஜெட்கோ வெளியிட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}