சென்னை: சென்னை நகரிலும், புறநகர்கள் பலவற்றிலும் இன்று பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
மின்சார பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்சார வயர்கள் சரியாக இருக்கின்றனவா, மரக் கிளைகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா என்பது உள்ளிட்டவை சரி பார்க்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மின்சார பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும். 2 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல்லாவரம், சோழிங்கநல்லலூர், அடையார், கிண்டி, போரூர், கே.கே.நகர், தாம்பரம், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியலையும் டான்ஜெட்கோ வெளியிட்டுள்ளது.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}