Power Cut: தாம்பரம், பல்லாவரம், அம்பத்தூர், அடையார்.. உங்க ஏரியாவுக்கு இன்னிக்கு பவர் கட்!

Jun 18, 2024,09:05 AM IST

சென்னை: சென்னை நகரிலும், புறநகர்கள் பலவற்றிலும் இன்று பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.


மின்சார பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்சார வயர்கள் சரியாக இருக்கின்றனவா, மரக் கிளைகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றனவா என்பது உள்ளிட்டவை சரி பார்க்கப்படும். அந்த வகையில் இன்று  சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மின்சார பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.




காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும். 2 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.


அதன்படி, காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பல்லாவரம், சோழிங்கநல்லலூர், அடையார், கிண்டி, போரூர், கே.கே.நகர், தாம்பரம், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில்  மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியலையும் டான்ஜெட்கோ வெளியிட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்