"பிடி பிடி.. விடாதே".. தச்சங்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு.. செம விறுவிறுப்பு!

Jan 06, 2024,01:35 PM IST
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலகலமாக தொடங்கி நடந்து வருகிறது

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான  பொங்கல் பண்டிகை  முன்னிட்டு ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகள் நடைபெறும். அதிலும் ஜல்லிக்கட்டுதான் டாப்பில் இருக்கும். விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி  தமிழகத்தின் பல முக்கிய மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கம்.   இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி சீசன் தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்,  தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுகள்தான்.



இதில், ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி உள்ளது. இதற்கான பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வந்தன. வாடிவாசல், பேரிகார்டு, காளைகளுக்கு பயிற்சி என் பல முன்னேற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே  நடைபெற்று வந்தன.

இந்நிலையில் இன்று கோலகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு. மாநில சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி போட்டியைத் தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுளள்ளன. மாடுகள் சீறிப் பாய, மாடு பிடி வீரர்கள் உற்சாகத்துடன் இறங்கியுள்ளனர். மாடுகள் பலமா, அதைப் பிடிக்கத் துடிக்கும் காளையர்கள் பலமா என்ற போட்டா போட்டி தச்சங்குறிச்சியைக் கலக்கிக் கொண்டுள்ளது. 

போட்டிகளை காண ஏராளமானோர் வருகைதந்துள்ளனர். தச்சங்குறிச்சியே தற்பொழுது விழாக்கோலம் பூண்டுள்ளது. பலத்த பாதுகாப்புடனும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுடனும் போட்டி நடந்து வருகிறது. கட்டில், சேர், மிக்ஸி, பீரோ என விதம் விதமான பரிசுகள் காளையர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்