சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் எனவும், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் அறிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை லோக்சபா தேர்தல் நடத்தப்படும். கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. தற்போது இந்த வருடம் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் தங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்த தீவிர தேர்தல் பணிகளில் மும்மரம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 20ல் தொடங்கி, மார்ச் 27ல் முடிவடையும். இந்த மனுக்கள் மார்ச் 28ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30 ஆகும்.

மார்ச் 19ஆம் தேதி 39 தொகுதியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு லோக்சபா தொகுதியிலும் ஏப்ரல் 19ம் தேதிதான் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கும் இதே அட்டவணைதான்.
தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் அட்டவணை
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 20
வேட்பு மனு தாக்கல் முடிவு - மார்ச் 27
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28
மனு வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30
வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 19
வாக்கு எண்ணிக்கை - ஜூன் 4
விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தல்
விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் ஏப்ரல் 19ம் தேதியே நடைபெறவுள்ளது. அங்கும் இதே அட்டவணைதான் செயல்படுத்தப்படும். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் தற்போது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் போய்ச் சேர்ந்து விட்டார். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
{{comments.comment}}