சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதையும் தாண்டி தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
தீபாவளிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளிக் கொண்டாடங்கள் களை கட்டியுள்ளன. காலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு, பட்டாசு வெடித்து தீபாவளியைத் தொடங்கினர். பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளதால் காலையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். காலை கோட்டா முடிந்து விட்ட நிலையில் அடுத்து மாலை வரை மக்கள் வெயிட் பண்ண வேண்டும். இருந்தாலும் பல பகுதிகளில் பகலிலும் கூட பட்டாசுகளை வெடிக்கத்தான் செய்கின்றனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் நேரம் பார்த்து மழை வந்து விட்டது. இதனால் மழை ஓய்ந்த பின்னர் மக்கள் பட்டாசு வெடித்தனர்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். எல்லாப் பகுதிகளிலுமே கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டது.
கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் பலியான கரூரிலும் கூட தீபாவளிக் கொண்டாட்டங்கள் காணப்பட்டன. அதேசமயம், சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் அமைதியான முறையில் தீபாவளியை மக்கள் கொண்டாடினர்.
மழை பெய்து வரும் நிலையில் பல ஊர்கள் உள்ள நிலையிலும் கூட மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}