சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதையும் தாண்டி தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
தீபாவளிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளிக் கொண்டாடங்கள் களை கட்டியுள்ளன. காலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு, பட்டாசு வெடித்து தீபாவளியைத் தொடங்கினர். பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளதால் காலையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். காலை கோட்டா முடிந்து விட்ட நிலையில் அடுத்து மாலை வரை மக்கள் வெயிட் பண்ண வேண்டும். இருந்தாலும் பல பகுதிகளில் பகலிலும் கூட பட்டாசுகளை வெடிக்கத்தான் செய்கின்றனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் நேரம் பார்த்து மழை வந்து விட்டது. இதனால் மழை ஓய்ந்த பின்னர் மக்கள் பட்டாசு வெடித்தனர்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். எல்லாப் பகுதிகளிலுமே கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டது.
கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் பலியான கரூரிலும் கூட தீபாவளிக் கொண்டாட்டங்கள் காணப்பட்டன. அதேசமயம், சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் அமைதியான முறையில் தீபாவளியை மக்கள் கொண்டாடினர்.
மழை பெய்து வரும் நிலையில் பல ஊர்கள் உள்ள நிலையிலும் கூட மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு
KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?
தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?
டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்
அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!
{{comments.comment}}