தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!

Oct 20, 2025,10:17 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதையும் தாண்டி தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.


தீபாவளிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளிக் கொண்டாடங்கள் களை கட்டியுள்ளன. காலையிலேயே மக்கள் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு, பட்டாசு வெடித்து தீபாவளியைத் தொடங்கினர். பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளதால் காலையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். காலை கோட்டா முடிந்து விட்ட நிலையில் அடுத்து மாலை வரை மக்கள் வெயிட் பண்ண வேண்டும். இருந்தாலும் பல பகுதிகளில் பகலிலும் கூட பட்டாசுகளை வெடிக்கத்தான் செய்கின்றனர்.


சென்னை புறநகர்ப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கும் நேரம் பார்த்து மழை வந்து விட்டது. இதனால் மழை ஓய்ந்த பின்னர் மக்கள் பட்டாசு வெடித்தனர்.




தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். எல்லாப் பகுதிகளிலுமே கொண்டாட்டங்கள் வழக்கமான உற்சாகத்துடன் காணப்பட்டது.


கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் பலியான கரூரிலும் கூட தீபாவளிக் கொண்டாட்டங்கள் காணப்பட்டன. அதேசமயம், சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் அமைதியான முறையில் தீபாவளியை மக்கள் கொண்டாடினர்.


மழை பெய்து வரும் நிலையில் பல ஊர்கள் உள்ள நிலையிலும் கூட மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்