சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளார் முக்தி அடைந்ததை ஒட்டி இன்று நடைபெற இருந்த அண்ணாமலை யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அக்டோபர் 19ம் தேதி முக்தி அடைந்தார். இவர் மேல்மருவத்தூரில் பல கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகலை நிறுவியவர். இவரது மறைவிற்கு பொது மக்கள் மற்றும் பக்தர்கள் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் முக்தி நிலை அடைந்ததை அறிந்த பாஜக தமிழக தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, அடுத்து இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன்.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
எங்கே எனது கவிதை!
{{comments.comment}}