அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

Jan 31, 2026,06:08 PM IST
சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த உறுதிமொழியை ஏற்று இடை நிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 37 நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து வந்தது. சென்னையில் முகாமிட்டு தொடர்ந்து ஆசிரியர்கள் பல விதமாக போராட்டம் நடத்தி வந்தனர். போலீஸாரால் ஆசிரியர்கள் கைது செய்யப்படும் சூழலும் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்ததால் ஜனவரி  மாத சம்பளமும் ரத்து செய்யப்படும் சூழலும் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உத்தரவாதம் வந்து சேர்ந்தது. அதை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சமஊதிய போராட்டம் சார்ந்து இன்று (31-01-2026) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதில் மூன்று நபர்கள் ஊதிய குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றதின் அடிப்படையிலும் நமது மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நல்லதொரு முடிவு ஏற்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் மாணவர்களின் கல்வி நலன், நெடு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

கற்றல் இடைவெளியை நீக்கி முன்பைவிட கற்பித்தல் பணியில் வெகு சிறப்பாக ஈடுபடுவோம். மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மூன்று நபர்கள் ஊதிய குழுவின் அறிக்கையை பெற்று எங்களது ஒற்றைக் கோரிக்கையை வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் நிறைவேற்றிட உதவுமாறு வேண்டுகிறோம். 

மேலும் இந்த போராட்ட நாட்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள், எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியம் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து நமது ஆட்சியுடன் இடைநிலை ஆசிரியர்கள் என்றென்றும் தொடர்ந்து பயணிக்க எங்களுக்கு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்