சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் வழியாக வழக்கப்படும் பட்டா உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னர் எல்லாம் பட்டா, சிட்டா எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அலைந்து திரிந்து தான் வாங்க வேண்டியது இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக கிராமங்களில் இருந்து வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதுமட்டும் இன்றி ஒன்று, இரண்டு நாட்களிலும் வாங்க முடியாது. பல மாதங்கள் அலைந்து வாங்கும் நிலையும் இருந்தது.

இவற்றிற்கு எல்லாம் ஒரு தீர்வாக தான் ஆன்லைன் வழியில் புதிய செயலி கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலியின் மூலம் தற்போது பட்டா, சிட்டா உள்ளிட்டவை பெறப்பட்டு வருகின்றன. இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் பல நாட்களுக்கு பின்னர் தான் கைக்கு கிடைக்கின்றன. இதையும் எளிதாக்கி, அவற்றை விரைவில் பெறுவதற்கான நடவடிக்கையை தற்போது தமிழக அரசு எடுத்து வருகிறது.
இதன்படி, ஆன்லைன் வழியாக வழங்கப்படும் பட்டா மாறுதல் உள்ளிட்ட 26 சான்றிதழ்களை 16 நாட்களுக்குள் கைக்கு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடைமுறையை விரைவுபடுத்தி கண்காணிக்க, ஒவ்வொரு தாலுக்காவுக்கும் சிறப்பு அலுவலரை நியமிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}