பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சந்திப்பு.. என்ன விசேஷம்?

Jul 16, 2024,04:07 PM IST
டெல்லி: டெல்லி சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். 

மக்களவைத் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. அதன்பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி பெறுப்பேற்றது. 3வது முறையாக பிரமதராக பதவி ஏற்றுக்கொண்டார் நரேந்திர மோடி. அவர் பதவியேற்ற பின்னர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆளுநர்கள், முதல்வர் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், 5 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று செல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர் ஆகியோர் உடன் சென்றனர். டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேற்று சந்தித்தார் ஆளுநர் ரவி. அதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.



இது தொடர்பாக தமிழக ஆளுநர் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவீட்டில்,  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலனைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பயணம் முடிந்து ஆளுநர் 19ம் தேதி சென்னை திரும்புகிறார். ஆளுநர் பிரதமரை சந்தித்தபோது, கள்ளக்குறிச்சி விஷசாராய சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்தது தொடர்பாக விவாதித்தாரா என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்