சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வருடமும் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் மூன்றாவது வாரம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வை ஏப்ரல் 13க்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 13க்குள் தேர்வு நடைபெறும் என அட்டவணை அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 10 மற்றும் 12 தேதிகளில் ரமலான் பண்டிகைக்கான பிறை தெரிய வாய்ப்புள்ளதால், 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 10ஆம் தேதி நடக்கவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22 ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}