சென்னை : தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 01ம் தேதியான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வெளியூர்களுக்குப் போகும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஹேப்பியாகியுள்ளனர். இந்த அறிவிப்பால் தற்போது மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பலரும் சொந்த ஊர்களுக்கு தயாராகி வருகிறார்கள். மறுநாள் நவம்பர் 01ம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதால் உடனடியாக ஊர் திரும்புவது பலருக்கும் சிரமமான காரியமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 01ம் தேதியான வெள்ளிக்கிழமை, விட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையை வைத்திருந்தனர். இடையில் ஒரு நாள் மட்டும் வேலை நாளாக இருந்தால் திரும்புவது சிரமம் என்பதால் இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக நவம்பர் 1ம் தேதியன்று, அரசு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு அலுவலகங்கள், பொத்துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிற்கு நவம்பர் 01ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 01ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 09ம் தேதி வேலையாக செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாளாக ஆகி உள்ளது.
அக்டோபர் 31, நவம்பர் 01 விடுமுறை நாட்கள். நவம்பர் 02 மற்றும் நவம்பர் 03 ஆகிய நாட்கள் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்கள் என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்கள் கிடைக்கிறது. இதனால் தீபாவளிக்கு வெளியூர் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் இது மிகவும் குஷியாக செய்தியாக மாறி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}