சென்னை: தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயத்தை மானிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
நாட்டில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தக்காளி பிற மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் கடுமையான மழையும் வெயிலும் மாறி மாறி நிலவு வருகிறது. இதனால் தக்காளியின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தக்காளி வரத் குறைந்து பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் தக்காளியின் அளவும் குறைந்தது. இதன் எதிரொலியாக வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பலப் பகுதிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்தது.இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டிலும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் உறைந்தனர்.
இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி நூறுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ₹ 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பெரிய வெங்காயம் ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம் தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர், ஆகிய பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதுக்கல் மற்றும் வெளிச்சந்தையில் விற்பதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே தக்காளி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}