சென்னை: தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயத்தை மானிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
நாட்டில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தக்காளி பிற மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் கடுமையான மழையும் வெயிலும் மாறி மாறி நிலவு வருகிறது. இதனால் தக்காளியின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தக்காளி வரத் குறைந்து பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் தக்காளியின் அளவும் குறைந்தது. இதன் எதிரொலியாக வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பலப் பகுதிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்தது.இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டிலும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் உறைந்தனர்.
இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி நூறுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ₹ 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பெரிய வெங்காயம் ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம் தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர், ஆகிய பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதுக்கல் மற்றும் வெளிச்சந்தையில் விற்பதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே தக்காளி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}