சென்னை: தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயத்தை மானிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
நாட்டில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தக்காளி பிற மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் கடுமையான மழையும் வெயிலும் மாறி மாறி நிலவு வருகிறது. இதனால் தக்காளியின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தக்காளி வரத் குறைந்து பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் தக்காளியின் அளவும் குறைந்தது. இதன் எதிரொலியாக வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மக்களுக்கு மானிய விலையில் தக்காளியை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பலப் பகுதிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்தது.இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டிலும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் சோகத்தில் உறைந்தனர்.
இந்த நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிலோ தக்காளி நூறுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி கிலோ ₹ 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பெரிய வெங்காயம் ரூபாய் 40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம் தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா நகர், ஆகிய பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பதுக்கல் மற்றும் வெளிச்சந்தையில் விற்பதை தடுக்க ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே தக்காளி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}