சென்னை: தமிழ்நாட்டில் 19ம் தேதி வரைக்கும் வெயில் நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்துகிறது. அட்டே மறுபடியும் சம்மர் வந்துருச்சா என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக்கிற அளவுக்கு வெயில் வெளுக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் புழுக்கத்தில் உள்ளனர்.

குறிப்பாக மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தொடர்ந்து 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுக்கிறது. சென்னையிலும் கூட பகல் முழுக்க நல்ல வெயில் கொளுத்துகிறது. இதே நிலைதான் பல்வேறு பகுதிகளிலும் நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு குட்நியூஸ் சொல்லியுள்ளார். அதாவது இன்னும் சில நாட்கள் இந்த வெயில் தொடருமாம். அதேசமயம், வருகிற 19, 20ம் தேதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக அவர் ஹேப்பி நியூஸ் சொல்லியுள்ளார். இதுதவிர வேறு அப்டேட் எதுவும் அவர் தரவில்லை. அதேசமயம், 19, 20ம் தேதிக்குப் பிறகு வெயில் வெகுவாக குறைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பான பல்வேறு கால்வாய், வாய்க்கால் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இதுதொடர்பான ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}