சென்னை: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களை இழிவுபடுத்தியதாக நடிகை குஷ்புவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பியிருந்தார். அவர் கூறிய இந்த கருத்திற்கு கண்டங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நடிகை குஷ்பு அவர்கள் முதல்வர் வழங்கும் கலைஞர் உரிமைத் திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசியுள்ளார். தமிழக அரசு வழங்கும் திட்டத்தை பிச்சை போடுகிறார்கள் என்று கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை பற்றி அறியாதவர் அவர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.
குஷ்பூவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பிடித்து பேசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
நீங்கள் கோடியில் புரள்பவர். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை, உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது. இதனை சிலர் முதலமைச்சர் எனக்கு தரும் சீர் என சொல்கிறார்கள். சில தாய்மார்கள் என் பிள்ளைகள் என்னை பார்த்துக் கொள்ளாவிட்டாலும் மகாராசா முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்துக் கொள்கிறார் என சொல்கிறார்கள்.
அந்த அளவிற்கு வாழ்வாதரத்திற்கு உதவக்கூடிய உரிமைத் தொகையை நீங்கள் அசால்டாக பிச்சை போடுகிறார் என்று சொல்கிறீர்கள். பிச்சை என்பதற்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு. உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி எல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக, இதற்கு உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள் என்று கூறியுள்ளார்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}