பிச்சைக் காசா.. நடிகை குஷ்பு அவர்களே.. அடக்கி வாசியுங்கள்.. அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்

Mar 13, 2024,11:08 AM IST

சென்னை:   தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களை இழிவுபடுத்தியதாக  நடிகை குஷ்புவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி  எழுப்பியிருந்தார். அவர் கூறிய இந்த கருத்திற்கு கண்டங்கள் எழுந்துள்ளது. 


இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




நடிகை குஷ்பு அவர்கள் முதல்வர் வழங்கும் கலைஞர் உரிமைத் திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசியுள்ளார். தமிழக அரசு வழங்கும் திட்டத்தை பிச்சை போடுகிறார்கள் என்று கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை பற்றி அறியாதவர் அவர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. 


குஷ்பூவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பிடித்து பேசுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். 


நீங்கள் கோடியில் புரள்பவர். பண வசதி படைத்தவர், பெரிய நடிகை, உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது. இதனை சிலர் முதலமைச்சர் எனக்கு தரும் சீர் என சொல்கிறார்கள். சில தாய்மார்கள் என் பிள்ளைகள் என்னை பார்த்துக் கொள்ளாவிட்டாலும் மகாராசா முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்துக் கொள்கிறார் என சொல்கிறார்கள். 


அந்த அளவிற்கு வாழ்வாதரத்திற்கு உதவக்கூடிய உரிமைத் தொகையை  நீங்கள் அசால்டாக பிச்சை போடுகிறார் என்று சொல்கிறீர்கள். பிச்சை என்பதற்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு. உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படி எல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக, இதற்கு உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்