மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா?.. "எல்லாமே வதந்தி".. அண்ணாமலை பேட்டி!

Jan 27, 2023,10:39 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவார் என்று கடந்த ஒரு மாதமாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. எல்லாமே வதந்திதான்.. ஆனால் மக்களிடையே மோடி நம்மவர் என்ற எண்ணம் உருவாகி விட்டதையே இந்த பேச்சுக்கள் காட்டுகின்றன என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



ஏஎன்ஐக்கு அண்ணாமலை விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டு மக்கள் தங்களுடையவராக பார்க்கிறார்கள். அந்நியராக அவரைப் பார்க்கவில்லை. உண்மையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவார் என்று பேசி வருகிறார்கள். எங்கு போனாலும் இதே பேச்சுதான்.

2 நாட்களுக்கு முன்பு கூட நான் தூத்துக்குடியில் ஒரு டீக்கடைக்குப் போனபோது, சிலர் வந்து என்னிடம், அண்ணா மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவாரா என்று கேட்டார். தமிழ்நாட்டில் இது பேசு பொருளாகியுள்ளது.  ராமநாதபுரத்தில் அவர் போட்டியிடுவார் என்று பேசுகிறார்கள். இது வதந்திதான்.. இந்த வதந்தியை மக்கள் தீவிரமாக பேசி வருகிறார்கள். அவர்கள் மோடி போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரை இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர் என்று நினைக்கவில்லை. மாறாக, தங்களுடையவர் என்று கருதுகிறார்கள் என்பதே இதன் பொருளாகும்.

தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கும் முன்பு ஜாதி அடையாளம், தமிழ் அடையாளம் உள்பட பல்வேறு விஷயங்களைப் பார்த்து விட்டுத்தான் வாக்களிப்பார்கள்.  ஆனால் மோடி எல்லாவற்றையும் மாற்றியுள்ளார். இதை வேறு எந்த தேசியத் தலைவரும் இதுவரை செய்ததில்லை. எனவே 2024 லோக்சபா தேர்தல் மிகவு்ம் வித்தியாசமானதாக இருக்கும் என்றார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

news

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி

news

என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!

news

தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்

news

தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!

news

2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா

news

"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை

news

மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை

news

நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்