ஏப்ரல் 19ம் தேதி ஓட்டுப் போட்டு விட்டு.. முடிவை அறிய.. 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்!

Mar 16, 2024,08:49 PM IST

டெல்லி: தென் மாநிலங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாநிலம் என பிரித்து தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.


லோக்சபா தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.மொத்தம் வரும் 7 கட்டங்களில் தென் மாநிலங்களைப் பொறுத்தவரை 4 கட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.


கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு 2வது கட்டத்தின்போது தேர்தல் நடைபெறும்.  அதே கட்டத்தில் கர்நாடகத்தின் 14  தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.




கர்நாடகத்தின் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்டமான மே 7ம் தேதி தேர்தல் நடைபெறும்.  ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தின்போது வாக்குப் பதிவு நடைபெறும். தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் முதல் கட்டத்திலேயே முடிந்து விட்டாலும் கூட முடிவை அறிய ஜூன் 4ம் தேதி வரை  காத்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மொத்த  இந்தியாவும் ஓட்டுப் போட்டு முடிக்கும் வரை தென் மாநில மக்கள் அமைதி காத்திருக்க வேண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்