டெல்லி: தென் மாநிலங்களில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாநிலம் என பிரித்து தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம்.
லோக்சபா தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.மொத்தம் வரும் 7 கட்டங்களில் தென் மாநிலங்களைப் பொறுத்தவரை 4 கட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு 2வது கட்டத்தின்போது தேர்தல் நடைபெறும். அதே கட்டத்தில் கர்நாடகத்தின் 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

கர்நாடகத்தின் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்டமான மே 7ம் தேதி தேர்தல் நடைபெறும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தின்போது வாக்குப் பதிவு நடைபெறும். தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் 4வது கட்டத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேர்தல் முதல் கட்டத்திலேயே முடிந்து விட்டாலும் கூட முடிவை அறிய ஜூன் 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதாவது கிட்டத்தட்ட 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மொத்த இந்தியாவும் ஓட்டுப் போட்டு முடிக்கும் வரை தென் மாநில மக்கள் அமைதி காத்திருக்க வேண்டியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}