சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மழைச்சூழல் இன்னும் பத்து நாட்களுக்கு நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் நிலவி வந்த அனல் கக்கும் வெயில் தற்போது தணிந்து அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. சில ஊர்களில் கன மழையும் வெளுத்து வாங்கியுள்ளது. இந்த கோடை மழையால் மக்கள் குளிர்ந்து போயுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் வெயில் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் பத்து நாட்களுக்கு தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளா.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமையான இன்று சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, மதுரை, தூத்துக்குடி உட்புறப் பகுதிகள், சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வெதர்மேன் தெரிவிக்கிறார்.
சில இடங்களில் கனமழையாக இது இருக்ககூடும் என்றும் அவர் கணித்துள்ளார். சென்னையை பொருத்தவரை ஒன்பதாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தேதி வரை ஆங்காங்கே திடீர் என்று நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் கூறியுள்ளார். இந்த மழை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. சென்னையிலும் கூட நேற்று ஆங்காங்கே லேசான மற்றும் மிதமான மழை பெய்துள்ளது.
பாகிஸ்தான் நம்மை அழிக்க நினைப்பதற்குள்.. பாதி பாகிஸ்தான் காலி.. இந்தியாவின் பலம் இதுதான்!
கூலி படத்தில் ரஜினிகாந்த்தின் சம்பளம் என்ன தெரியுமா.. ஸ்ருதி ஹாசனுக்கு இவ்வளவா?
மாமியாரின் போக்கில் கோபம்.. கூட்டாளிகளுடன் சேர்ந்து.. கர்நாடக டாக்டர் எடுத்த விபரீத முடிவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்?.. டாக்டர் அன்புமணி கேள்வி
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு.. மதுரை தவெக மாநாட்டின் தீம்!
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம்.. சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகா சங்கடஹர சதுர்த்தி.. அண்ணன் விநாயகர் மட்டுமல்ல.. தம்பி முருகனையும் வழிபட சிறந்த நாள்!
பொறுப்பில்லாமல் பேசும் ஆசிம் முனீர்.. இந்தியா கண்டனம்.. சரி, பாகிஸ்தானிடம் என்னதான் இருக்கு?
ஆன்மீகத்தின் தொடக்கம் எது?
{{comments.comment}}