சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மழைச்சூழல் இன்னும் பத்து நாட்களுக்கு நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் நிலவி வந்த அனல் கக்கும் வெயில் தற்போது தணிந்து அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. சில ஊர்களில் கன மழையும் வெளுத்து வாங்கியுள்ளது. இந்த கோடை மழையால் மக்கள் குளிர்ந்து போயுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் வெயில் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த நிலை இன்னும் பத்து நாட்களுக்கு தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளா.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமையான இன்று சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, மதுரை, தூத்துக்குடி உட்புறப் பகுதிகள், சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வெதர்மேன் தெரிவிக்கிறார்.
சில இடங்களில் கனமழையாக இது இருக்ககூடும் என்றும் அவர் கணித்துள்ளார். சென்னையை பொருத்தவரை ஒன்பதாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தேதி வரை ஆங்காங்கே திடீர் என்று நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் கூறியுள்ளார். இந்த மழை தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. சென்னையிலும் கூட நேற்று ஆங்காங்கே லேசான மற்றும் மிதமான மழை பெய்துள்ளது.
தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு
KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?
தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?
டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!
Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்
அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி
லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?
Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!
{{comments.comment}}