சென்னை: வட கிழக்குப் பருவ மழை எப்போது தொடங்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு காத்துள்ள நிலையில் அதுகுறித்த அறிகுறிகள் வெளி வர ஆரம்பித்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இதை வட கிழக்குப் பருவ மழைக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் கூட ஆவலுடன் காத்திருந்த காற்று வீச்சு தொடங்குவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவிததுள்ளார்.
இதுதொடர்பாக வெதர்மேன் போட்டுள்ள டிவீட்டில், சென்னை நகரை நோக்கி கடலிலிருந்து மேகக் கூட்டங்கள் நகர ஆரம்பித்துள்ளன. இதுதான் முதல் மேகக் கூட்டம். இதற்குத்தான் நாம் காத்திருந்தோம். இதை பருவ மழைக்காலத்தின் தொடக்கம் என்று கூற முடியாது. ஆனால் மாற்றம் நடக்க ஆரம்பித்து விட்டது. காற்றின் போக்கில் மாற்றம் தெரிகிறது. 10 மணிவாக்கில் சென்னை நகரில் சின்னதாக ஒரு மழை இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழைக்காலம்தான் மாநிலம் முழுமைக்கும் நல்ல மழைப் பொழிவு கிடைக்கும். குறிப்பாக சென்னைக்கு. இந்த முறை தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவ மழையே கூடுதலாக பொழிந்திருக்கிறது. குறிப்பாக சென்னைக்கு 8 சதவீதத்திற்கும் கூடுதலான மழை கிடைத்துள்ளது. ஏற்கனவே பெரும்பாலான நீர் நிலைகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில் வட கிழக்குப் பருவ மழைக்காலத்திலும் இயல்பான அளவில் மழை பெய்தாலே போதும் மக்களுக்கு தண்ணீர்ப் பஞ்சம் வராமல் தப்பி விடுவார்கள்.
மழை வருதோ இல்லையோ மாற்றம் வர ஆரம்பித்து விட்டது. அது ஏமாற்றம் தராமல் நல்ல மழைப் பொழியைும் கொடுத்து மனங்களையும், மண்ணையும் நிறைத்துச் சென்றால் மகிழ்ச்சிதான்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}