சென்னை: வட கிழக்குப் பருவ மழை எப்போது தொடங்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு காத்துள்ள நிலையில் அதுகுறித்த அறிகுறிகள் வெளி வர ஆரம்பித்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இதை வட கிழக்குப் பருவ மழைக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் கூட ஆவலுடன் காத்திருந்த காற்று வீச்சு தொடங்குவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவிததுள்ளார்.

இதுதொடர்பாக வெதர்மேன் போட்டுள்ள டிவீட்டில், சென்னை நகரை நோக்கி கடலிலிருந்து மேகக் கூட்டங்கள் நகர ஆரம்பித்துள்ளன. இதுதான் முதல் மேகக் கூட்டம். இதற்குத்தான் நாம் காத்திருந்தோம். இதை பருவ மழைக்காலத்தின் தொடக்கம் என்று கூற முடியாது. ஆனால் மாற்றம் நடக்க ஆரம்பித்து விட்டது. காற்றின் போக்கில் மாற்றம் தெரிகிறது. 10 மணிவாக்கில் சென்னை நகரில் சின்னதாக ஒரு மழை இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழைக்காலம்தான் மாநிலம் முழுமைக்கும் நல்ல மழைப் பொழிவு கிடைக்கும். குறிப்பாக சென்னைக்கு. இந்த முறை தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவ மழையே கூடுதலாக பொழிந்திருக்கிறது. குறிப்பாக சென்னைக்கு 8 சதவீதத்திற்கும் கூடுதலான மழை கிடைத்துள்ளது. ஏற்கனவே பெரும்பாலான நீர் நிலைகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில் வட கிழக்குப் பருவ மழைக்காலத்திலும் இயல்பான அளவில் மழை பெய்தாலே போதும் மக்களுக்கு தண்ணீர்ப் பஞ்சம் வராமல் தப்பி விடுவார்கள்.
மழை வருதோ இல்லையோ மாற்றம் வர ஆரம்பித்து விட்டது. அது ஏமாற்றம் தராமல் நல்ல மழைப் பொழியைும் கொடுத்து மனங்களையும், மண்ணையும் நிறைத்துச் சென்றால் மகிழ்ச்சிதான்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}