சென்னை: வட கிழக்குப் பருவ மழை எப்போது தொடங்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஆவலோடு காத்துள்ள நிலையில் அதுகுறித்த அறிகுறிகள் வெளி வர ஆரம்பித்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இதை வட கிழக்குப் பருவ மழைக்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் கூட ஆவலுடன் காத்திருந்த காற்று வீச்சு தொடங்குவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவிததுள்ளார்.

இதுதொடர்பாக வெதர்மேன் போட்டுள்ள டிவீட்டில், சென்னை நகரை நோக்கி கடலிலிருந்து மேகக் கூட்டங்கள் நகர ஆரம்பித்துள்ளன. இதுதான் முதல் மேகக் கூட்டம். இதற்குத்தான் நாம் காத்திருந்தோம். இதை பருவ மழைக்காலத்தின் தொடக்கம் என்று கூற முடியாது. ஆனால் மாற்றம் நடக்க ஆரம்பித்து விட்டது. காற்றின் போக்கில் மாற்றம் தெரிகிறது. 10 மணிவாக்கில் சென்னை நகரில் சின்னதாக ஒரு மழை இருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழைக்காலம்தான் மாநிலம் முழுமைக்கும் நல்ல மழைப் பொழிவு கிடைக்கும். குறிப்பாக சென்னைக்கு. இந்த முறை தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவ மழையே கூடுதலாக பொழிந்திருக்கிறது. குறிப்பாக சென்னைக்கு 8 சதவீதத்திற்கும் கூடுதலான மழை கிடைத்துள்ளது. ஏற்கனவே பெரும்பாலான நீர் நிலைகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில் வட கிழக்குப் பருவ மழைக்காலத்திலும் இயல்பான அளவில் மழை பெய்தாலே போதும் மக்களுக்கு தண்ணீர்ப் பஞ்சம் வராமல் தப்பி விடுவார்கள்.
மழை வருதோ இல்லையோ மாற்றம் வர ஆரம்பித்து விட்டது. அது ஏமாற்றம் தராமல் நல்ல மழைப் பொழியைும் கொடுத்து மனங்களையும், மண்ணையும் நிறைத்துச் சென்றால் மகிழ்ச்சிதான்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}