சென்னை: அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான அளவில் அல்லது அதற்கும் கீழே வெப்ப நிலை இருக்கும் என்று தமிழ்நாடுவெதர்மேன் கூறியுள்ளார். கிழக்கிலிருந்து வீசும் காற்றின் காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெயில் வெளுத்தெடுக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில். சென்னையிலும் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல்தான் வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சற்றே ஆறுதலான செய்தியைக் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

அதன்படி அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான அல்லது அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும். கிழக்கிலிருந்து வரும் காற்றே இதற்குக் காரணம். தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டிலும் கூட வெப்ப நிலை சற்று குறையும். இங்கெல்லாம் தொடர்ந்து 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியல் வரை பதிவாகி வருகிறது. இது 37 டூ 39 டிகிரி செல்சியஸாக குறையக்க ூடும்.
தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை அனல் அலை வீச்சுக்கு வாய்ப்பு குறைவுதான் என்று கூறியுள்ளார் வெதர்மேன். இன்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. காலையிலேயே கொளுத்தும் வெயிலை சற்று காணோம். இதுவே நல்ல அறிகுறிதான்.. ஒரு பக்கம் தேர்தல் வெப்பம்.. இன்னொரு பக்கம் சூரியனின் சுட்டெரிக்கும் வெயில் என மக்கள் வறுபட்டு வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு சற்று நிம்மதி கிடைத்தால் சந்தோஷம்தானே.. அனுபவிப்போம் இதையும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}