சென்னை: அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான அளவில் அல்லது அதற்கும் கீழே வெப்ப நிலை இருக்கும் என்று தமிழ்நாடுவெதர்மேன் கூறியுள்ளார். கிழக்கிலிருந்து வீசும் காற்றின் காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெயில் வெளுத்தெடுக்கிறது. பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில். சென்னையிலும் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல்தான் வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சற்றே ஆறுதலான செய்தியைக் கொடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

அதன்படி அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் இயல்பான அல்லது அதற்குக் கீழான வெப்ப நிலையே பதிவாகும். கிழக்கிலிருந்து வரும் காற்றே இதற்குக் காரணம். தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் உட்புற தமிழ்நாட்டிலும் கூட வெப்ப நிலை சற்று குறையும். இங்கெல்லாம் தொடர்ந்து 40 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியல் வரை பதிவாகி வருகிறது. இது 37 டூ 39 டிகிரி செல்சியஸாக குறையக்க ூடும்.
தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை அனல் அலை வீச்சுக்கு வாய்ப்பு குறைவுதான் என்று கூறியுள்ளார் வெதர்மேன். இன்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது. காலையிலேயே கொளுத்தும் வெயிலை சற்று காணோம். இதுவே நல்ல அறிகுறிதான்.. ஒரு பக்கம் தேர்தல் வெப்பம்.. இன்னொரு பக்கம் சூரியனின் சுட்டெரிக்கும் வெயில் என மக்கள் வறுபட்டு வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு சற்று நிம்மதி கிடைத்தால் சந்தோஷம்தானே.. அனுபவிப்போம் இதையும்.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}