சென்னை: இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் தேதி தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. கடந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ததோ.. எவ்வளவு தண்ணீரால் அவதிப்பட்டோமோ.. அதே அளவிற்கு இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். மதியம் 12 மணி முதல் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அய்யோ இந்த வெயில் காலம் எப்ப தான் முடியுமோ என்ற மக்களின் மைன்ட் வாய்ஸ்.. நமக்குப் புரிகிறது.. ஏனெனில் இன்னும் இரண்டு மாதத்திற்கு இந்த வெயிலின் தாக்கத்தினால் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது .. இந்த வெயில் தாக்கம் ஓயாது..
ஏனெனில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். குறிப்பாக இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக கூடுமாம். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுமாம். அப்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயருமாம். பி கேர்ஃபுல் மக்களே!
இதற்கிடையே தென் தமிழக மக்கள் சற்று பெருமூச்சு விடலாம். ஏனென்றால் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடுமாம். அதே நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}