சென்னை: இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் தேதி தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. கடந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ததோ.. எவ்வளவு தண்ணீரால் அவதிப்பட்டோமோ.. அதே அளவிற்கு இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். மதியம் 12 மணி முதல் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அய்யோ இந்த வெயில் காலம் எப்ப தான் முடியுமோ என்ற மக்களின் மைன்ட் வாய்ஸ்.. நமக்குப் புரிகிறது.. ஏனெனில் இன்னும் இரண்டு மாதத்திற்கு இந்த வெயிலின் தாக்கத்தினால் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது .. இந்த வெயில் தாக்கம் ஓயாது..
ஏனெனில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். குறிப்பாக இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக கூடுமாம். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுமாம். அப்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயருமாம். பி கேர்ஃபுல் மக்களே!
இதற்கிடையே தென் தமிழக மக்கள் சற்று பெருமூச்சு விடலாம். ஏனென்றால் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடுமாம். அதே நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}