மண்ட பத்திரம் மக்களே.. 4 நாட்களுக்கு வறண்ட வானிலைதானாம்..  2,3 ல் லேசான மழைக்கு வாய்ப்பு!

Mar 29, 2024,06:56 PM IST

சென்னை: இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் தேதி தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. கடந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ததோ.. எவ்வளவு தண்ணீரால் அவதிப்பட்டோமோ.. அதே அளவிற்கு இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். மதியம் 12 மணி முதல் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 



அய்யோ இந்த வெயில் காலம் எப்ப தான் முடியுமோ என்ற மக்களின் மைன்ட் வாய்ஸ்.. நமக்குப் புரிகிறது.. ஏனெனில் இன்னும் இரண்டு மாதத்திற்கு இந்த வெயிலின் தாக்கத்தினால் ஓடவும்  முடியாது.. ஒளியவும் முடியாது .. இந்த வெயில் தாக்கம் ஓயாது..


ஏனெனில் தமிழ்நாட்டில்  வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். குறிப்பாக இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக கூடுமாம்.  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  வறண்ட வானிலையே நிலவுமாம். அப்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயருமாம். பி கேர்ஃபுல் மக்களே!


இதற்கிடையே தென் தமிழக மக்கள் சற்று பெருமூச்சு விடலாம். ஏனென்றால் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடுமாம். அதே நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்