சென்னை: இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவுமாம். ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் தேதி தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. கடந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ததோ.. எவ்வளவு தண்ணீரால் அவதிப்பட்டோமோ.. அதே அளவிற்கு இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகிறோம். மதியம் 12 மணி முதல் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அய்யோ இந்த வெயில் காலம் எப்ப தான் முடியுமோ என்ற மக்களின் மைன்ட் வாய்ஸ்.. நமக்குப் புரிகிறது.. ஏனெனில் இன்னும் இரண்டு மாதத்திற்கு இந்த வெயிலின் தாக்கத்தினால் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது .. இந்த வெயில் தாக்கம் ஓயாது..
ஏனெனில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம். குறிப்பாக இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக கூடுமாம். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுமாம். அப்போது தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயருமாம். பி கேர்ஃபுல் மக்களே!
இதற்கிடையே தென் தமிழக மக்கள் சற்று பெருமூச்சு விடலாம். ஏனென்றால் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடுமாம். அதே நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}