சென்னை: அமைச்சரவையில் மாற்றம் வருமா என தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி கொளத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது அமைச்சரவையில் மாற்றம் வருமா என முதல்வரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதல்வர்,அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் .ஏமாற்றம் இருக்காது என சூசகமாக தெரிவித்து இருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.
இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டார். பின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் பல கட்டங்களாக ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்து வந்த நிலையில் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில் அவர் மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இதனால் செந்தில் பாலாஜி விரைவில் அமைச்சராக பதவி ஏற்பார் என கூறப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நிலையில், இந்தப் பதவி தற்போது தங்கம் தென்னரசு வசம் உள்ளது.
இந்த நிலையில் அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியும், இரண்டு அமைச்சர்கள் நீட்டப்பட்டு புதிதாக இரண்டு அமைச்சர்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை மீண்டும் அவருக்கே ஒதுக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கே மின்சாரத்துறை பதவி வழங்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}