சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழாத வண்ணம் திமுக தலைமை கவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் சிறிய அளவிலான இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கான இலாகாக்கள் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில்கள் துறையையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் துறை டாக்டர் கே.பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் வனம் மற்றும் காதி துறை அமைச்சர் என அழைக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}