சென்னை: தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளன. இந்த தேர்தலை முன்னிட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழாத வண்ணம் திமுக தலைமை கவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் சிறிய அளவிலான இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கான இலாகாக்கள் மாற்றம் செய்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில் துறை பொன்முடி கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடி காதி மற்றும் கிராம தொழில்கள் துறையையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் பால்வளத் துறையை மட்டும் கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வகித்து வந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம் துறை டாக்டர் கே.பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் வனம் மற்றும் காதி துறை அமைச்சர் என அழைக்கப்படுவார் என தெரிவித்துள்ளது.
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}