விஜய்யின் பரந்தூர் பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

Jan 20, 2025,07:08 PM IST

சென்னை:  பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 3 வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தாமதமாகி வருகிறது. விவசாய நிலங்களில்  விமான நிலையத்தை அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளும், கிராமத்தினரும் கூறி வருகின்றனர்.




தொடர்ந்து போராட்டத்தில்  ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினர்களையும் சந்திப்பதற்காக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் அப்பகுதி மக்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்களையும், பொதுமக்களையும்  விஜய் இன்று சந்தித்தார்.


இந்நிலையில், பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வந்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம். நானும் மூன்றரை வருடங்களாக பரந்தூர் சென்று மக்களை சந்தித்து வருகிறேன் என்றார் செல்வப் பெருந்தகை.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்