சென்னை: பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 3 வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தாமதமாகி வருகிறது. விவசாய நிலங்களில் விமான நிலையத்தை அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளும், கிராமத்தினரும் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினர்களையும் சந்திப்பதற்காக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் அப்பகுதி மக்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்களையும், பொதுமக்களையும் விஜய் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வந்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம். நானும் மூன்றரை வருடங்களாக பரந்தூர் சென்று மக்களை சந்தித்து வருகிறேன் என்றார் செல்வப் பெருந்தகை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}