சென்னை: பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 3 வருடமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தாமதமாகி வருகிறது. விவசாய நிலங்களில் விமான நிலையத்தை அமைத்தால் தங்களது வாழ்வாதாரம் மட்டுமல்லாமல், சென்னையைச் சுற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளும், கிராமத்தினரும் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினர்களையும் சந்திப்பதற்காக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய் அப்பகுதி மக்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினர்களையும், பொதுமக்களையும் விஜய் இன்று சந்தித்தார்.
இந்நிலையில், பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வந்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பரந்தூர் செல்லும் தவெக தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம். நானும் மூன்றரை வருடங்களாக பரந்தூர் சென்று மக்களை சந்தித்து வருகிறேன் என்றார் செல்வப் பெருந்தகை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}