சூப்பர் நியூஸ்... பள்ளி மேலாண்மை குழுக்களில்.. 4 முன்னாள் மாணவர்களை சேர்க்க. தமிழக அரசு முடிவு!

Jul 01, 2024,11:09 AM IST
சென்னை: பள்ளி மேலாண்மை குழுக்களில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மகளிர் குழுவினர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 4 முன்னாள் மாணவர்களையும் சேர்க்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தற்போது 20 பேராக உள்ள இந்தக் குழுவானது இனி 24 பேராக இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் கொண்டுவரப்பட்டன. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் எஸ் எம் சி எனப்படும் பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் குழுவில் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என மொத்தம் 20 பேர் கொண்ட குழுக்களாக அமைக்கப்பட்டது.



இந்த 20 பேரில் 18 பேர் பெற்றோராகவும், மொத்த உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டையும், குழந்தைகளின் வளர்ச்சியையும் கண்காணிப்பதே இதன் நோக்கமாகும். முதலில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டு வந்தன. பின்னர் இந்த குழுகள் 2021 முதல் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. தற்போது 1ம் வகுப்பு முதல் 12ம் வரையிலான வகுப்புகளைக் கொண்ட 37, 500 அரசு பள்ளிகளில் இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்தக் குழு உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை பள்ளிக்கு வந்து பார்வையிட வேண்டும். பள்ளியின் தற்போதைய நிலை என்ன, தேவையான வசதிகள் என்ன என்பது குறித்து ஒவ்வொரு மாதமும் ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ள வேண்டும். இந்த கல்வி மேலாண் குழு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும். 

அதன்படி ஜூலை  2022 முதல் 2024 மே வரை அரசுப் பள்ளிகளின் மேலாண்மை குழு கூட்டங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வந்தன. ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இந்த அரசு பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான எஸ்எம்சி குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு உள்ளது.

இந்த நிலையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் என 20 பேர் கொண்ட குழுவில், கூடுதலாக முன்னாள் மாணவர்கள் நான்கு பேரையும் சேர்த்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி 20 பேர் கொண்ட இந்த குழுவின் எண்ணிக்கையை தற்போது 24 ஆக உயர இருக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்