சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக்கடலில் நிலவிவரும் மேலெடுக்கு சுழற்சி காரணமாகவும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மதுரையில் 2 மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

அதேபோல் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி 3 மணி நேரம் பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இது தவிர திண்டுக்கல், கோவை, ஈரோடு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் குன்னூரில் பெய்த பலத்த மழை காரணமாக, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் பாதையில் ராட்சத பாறை சரிந்து விழுந்தது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தண்டவாளத்தில் இருந்து ராட்சத பாதையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி,மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Iran War: ஈரான் மீதான போர் நிறுத்தி வைப்பு: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
நான் ஒருவன் தான் உண்மையான எதிர்க்கட்சி...தமிழர் கட்சி சீமான் ஆவேசம்
ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செம மழை காத்திருக்கிறது.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!
தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?
வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை: நயினார் நாகேந்திரன் தாக்கு!
திருத்துறைப்பூண்டி பொன்னிறை புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா
{{comments.comment}}