சென்னை: ஒரு நாள் திருப்பதி சுற்றுலா திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 400 நபர்கள் வீதம் திருப்பதிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து தினசரி லட்ச்சக்கனக்கான மக்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக சென்னையிலிருந்து தினசரி ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்துதான் திருப்பதிக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஒரு நாள் சுற்றுலா திட்டத்தின் மூலமாக திருப்பதிக்கு தினசரி 400 நபர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த சுற்றுலாத்துறையின் அறிக்கை:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினால் இயக்கப்பட்டு வரும் சுற்றுலா திட்டங்களில் அதிக அளவில் பொது மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சுற்றுப்பயணம் திருப்பதி ஒரு நாள் சுற்றுலாவாகும். திருப்பதி சுற்றுலா செல்லும் பேருந்து சென்னை வாலாஜா சாலை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலமான சுற்றுலா வளாகத்தில் இருந்து தினசரி காலை 4:30 மணிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றது.
ஒவ்வொரு பேருந்திலும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபடுவார். வழிகாட்டிகள் திருப்பதி சுற்றுலா பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சுற்றுலா பயணத்திற்கான விளக்கங்களை அளிப்பார். சுற்றுலா பயணிகளுக்கு காலை உணவு திருத்தணி ஓட்டல் தமிழ்நாடு உணவகத்தில் வழங்கப்படுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கிய சீட்டின் மூலம் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் நபர் ஒருவருக்கு திருப்பதியில் லட்டு ஒன்று வழங்கப்படுகின்றது. மேலும் மதிய உணவுக்கு பின் திருச்சானூர் சென்று பத்மாவதி அம்மனை தரிசனம் செய்த பிறகு இரவு உணவு வழங்கப்பட்டு மீண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்து திருப்பதி சுற்றுலா பயணம் முடிவு பெறுகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் www.ttdcoline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தொலைபேசி எண்கள் 044- 25333333 மற்றும் 044- 25333444 தொடர்பு கொண்டு பெறலாம் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}