ஜில் ஜில் மழை.. இன்னிக்கு ராத்திரியும் இருக்கு.. சென்னை முதல் தஞ்சாவூர் வரை..!

Aug 22, 2023,10:56 AM IST

சென்னை: சென்னை முதல் தஞ்சாவூர் வரை இன்று இரவு முதல் நாளை காலை வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.


வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே 25ம் தேதி வரை பரவலாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.




இந்த மழை இன்று இரவும் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்  இன்று இரவு முதல் மறு நாள் காலை வரை பரவலாக மழை இருக்கும். பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை காவிரி டெல்டா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், திருவண்மாமலை, தஞ்சாவூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கும்.


ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய மலை வாசஸ்தலங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்புண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்