சென்னை: சென்னை முதல் தஞ்சாவூர் வரை இன்று இரவு முதல் நாளை காலை வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே 25ம் தேதி வரை பரவலாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இந்த மழை இன்று இரவும் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று இரவு முதல் மறு நாள் காலை வரை பரவலாக மழை இருக்கும். பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை காவிரி டெல்டா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், திருவண்மாமலை, தஞ்சாவூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கும்.
ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய மலை வாசஸ்தலங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்புண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
{{comments.comment}}