சென்னை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும் எனவும், வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்திற்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி முழுக் கொள்ளளவை எட்டும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்து, கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கே எஸ் ஆர் அணை நேற்று முழு கொள்ளளவை எட்டியது. இதனால் நீரின் வெளியேற்றம் அதிகரித்து ஒகேனக்கல் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இருப்பினும் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் காவிரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது வினாடிக்கு 60,771 கன அடியில் இருந்து தற்போது 33,040 கனடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 86.85 அடியில் இருந்து தற்போது 89.31 கன அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 51.86 டிஎம்சி ஆக உள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 90 அடியை நெருங்கும் நிலையில், வரும் நாட்களில் காவிரி பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து 120 அடியை எட்டும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடரும். குறிப்பாக குடகு, சிக்மகளூரு, வயநாடு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கன மழை தொடர வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சுதந்திர தினத்திற்குள் 120 அடியை எட்ட வாய்ப்புள்ளது. அதேபோல் வால்பாறை நீலகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு:
சென்னை,திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே மழையை எதிர்பார்க்கலாம். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பிற பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை.
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
நாகர்கோவில் மற்றும் போத்தனூரிலிருந்து அம்ரித் பாரத் ரயில்கள்!
திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தொடக்கம்!
{{comments.comment}}