- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு பெரிதாக கன மழை இருக்காது. கிறிஸ்துமஸ் தினத்தன்று லேசான அல்லது மிதமான மழை இருக்கும். யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஜனவரி 27ஆம் தேதி வரை நீடிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் போட்டுள்ள டிவீட்டில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை எதுவும் இருக்காது. கிறிஸ்துமஸ் அன்று லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மிதமான மழைப்பொழிவு இருக்கும். இது ஜாலியான மழையாகவே இருக்கும், என்ஜாய் பண்ணக் கூடியதாக இருக்கும். மக்களை கஷ்டப்படுத்தும் வகையில் இருக்காது.
டிசம்பர் 27 இல் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையில் மிக பலத்த மழை பெய்யும் என ஒரு ஆடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். இது தவறான கணிப்பு. இந்த ஆடியோவை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான கருத்து.
வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் அதாவது ஜனவரி வரை பரவலாக நீடிக்கக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பிறகென்னப்பா.. கிறிஸ்துமஸையும், நியூ இயரையும் தடபுடலா கொண்டாட ரெடியாகுங்க!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}