- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு பெரிதாக கன மழை இருக்காது. கிறிஸ்துமஸ் தினத்தன்று லேசான அல்லது மிதமான மழை இருக்கும். யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஜனவரி 27ஆம் தேதி வரை நீடிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் போட்டுள்ள டிவீட்டில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை எதுவும் இருக்காது. கிறிஸ்துமஸ் அன்று லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மிதமான மழைப்பொழிவு இருக்கும். இது ஜாலியான மழையாகவே இருக்கும், என்ஜாய் பண்ணக் கூடியதாக இருக்கும். மக்களை கஷ்டப்படுத்தும் வகையில் இருக்காது.
டிசம்பர் 27 இல் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையில் மிக பலத்த மழை பெய்யும் என ஒரு ஆடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். இது தவறான கணிப்பு. இந்த ஆடியோவை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான கருத்து.
வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் அதாவது ஜனவரி வரை பரவலாக நீடிக்கக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பிறகென்னப்பா.. கிறிஸ்துமஸையும், நியூ இயரையும் தடபுடலா கொண்டாட ரெடியாகுங்க!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}