- மஞ்சுளா தேவி
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு பெரிதாக கன மழை இருக்காது. கிறிஸ்துமஸ் தினத்தன்று லேசான அல்லது மிதமான மழை இருக்கும். யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் ஜனவரி 27ஆம் தேதி வரை நீடிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் போட்டுள்ள டிவீட்டில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை எதுவும் இருக்காது. கிறிஸ்துமஸ் அன்று லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மிதமான மழை இருக்கும்.
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் மிதமான மழைப்பொழிவு இருக்கும். இது ஜாலியான மழையாகவே இருக்கும், என்ஜாய் பண்ணக் கூடியதாக இருக்கும். மக்களை கஷ்டப்படுத்தும் வகையில் இருக்காது.
டிசம்பர் 27 இல் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையில் மிக பலத்த மழை பெய்யும் என ஒரு ஆடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். இது தவறான கணிப்பு. இந்த ஆடியோவை தயவுசெய்து யாரும் பரப்ப வேண்டாம். இது முற்றிலும் தவறான கருத்து.
வடகிழக்குப் பருவமழை அடுத்த மாதம் அதாவது ஜனவரி வரை பரவலாக நீடிக்கக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
பிறகென்னப்பா.. கிறிஸ்துமஸையும், நியூ இயரையும் தடபுடலா கொண்டாட ரெடியாகுங்க!
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}