சென்னை: டான்ஜெட்கோ சார்பில் சென்னை மற்றும் புறநகர்கள் பலவற்றில் இன்று மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் ரத்து செய்யப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டான்ஜெட்கோ விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை-யில் 21.08.2024 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அடையாறு, அஸ்தினாபுரம், மடிப்பாக்கம், அம்பத்தூர், அத்திப்பட்டு, சோத்துபெரும்பேடு மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அடையாறு - 4வது மெயின் ரோடு காந்தி நகர், 3வது மற்றும் 3வது கிரன்ச்ட் பார்க் சாலை, 3வது பிரதான சாலையின் ஒரு பகுதி.
அஸ்தினாபுரம் - ஆர்.பி சாலையில் ஒரு பகுதி, அண்ணாசாலை, காயத்ரி நகர், வேல்முருகந் நகர், வினோபாஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பாஷ்யம் நகர், மாணிக்கம் நகர், பிபிஆர்தெரு.

மடிப்பாக்கம் - ஷீலா நகர், அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர் தெற்கு, குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் வடக்கு, ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோயில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர்.
அம்பத்தூர் - சிட்கோ தொழிற்பேட்டை, இபி சாலை 1வது தெரு, அப்பாசாமி சாலை, வடக்கு கட்டடத்தின் 9வது மற்றும் 10வது தெரு, 7வது மற்றும் 8வது தெரு, டாஸ் எஸ்டேட், மகாத்மா காந்திச ாலை, வடக்கு கட்டத்தின் 6 முதல் 9வது தெரு.
அத்திப்பட்டு - ஜூவாரி சிமென்ட்ஸ், அத்தானி கன்டெய்னர் டெர்மினல் லிமிடெட், வட சென்னை நிலை பிஎச்இ எல் தளம், இந்தியன் ஆயில் எல்என்ஜி லிமிடெட், எல் அன்ட் டி பில்டிங், வட சென்னை நிலை 1 துணை நிலையம்.
சோத்துபெரும்பேடு - நெற்குன்றம், சோத்துபெரும்பேடு ஒரு பகுதி, செக்கஞ்சேரி, அட்டப்பாளையம், கன்னியம் பாளையம், பசுவன் பாளையம், ஞாயிறு கிராமம், மஃபுஷ்கான் பேட்டை.
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}