டீம்  ஓபிஎஸ்ஸுக்கு இதே வேலையாப் போச்சு.. கர்நாடக தேர்தலிலிருந்து விலகல்!

Apr 24, 2023,11:21 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டு பின்னர் விலகினார்கள். இப்போது கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து விட்டு அதிலிருந்தும் விலகியுள்ளது ஓபிஎஸ் அணி.

ஓபிஎஸ் அணி இப்படி அடுத்தடுத்து சறுக்கலான முடிவுகளை எடுப்பதன் மூலம் அதிமுகவினரின் கேலிக் கூத்துக்குள்ளாகியுள்ளனர். ஒரு தெளிவான, உறுதியான முடிவு எடுக்க முடியாத அளவுக்கு ஓபிஎஸ் அணி வலுவிழந்து விட்டதா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் முன் வைக்கப்படுகிறது.



அதிமுக பிளவுபட்டு எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக மாறியது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சட்டப் போராட்டங்கள் தொடங்கின. இதில் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி அணி வென்று வந்தது. முக்கிய வெற்றியை சமீபத்தில் பெற்ற நிலையில் அதிரடியாக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி அதில் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டு விட்டது.

ஆனாலும் சட்டப் போராட்டங்கள் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலானதுதான்.அவர்தான் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையாகவும் இருக்கிறார். சட்டத்தின் பார்வையில் இதுதான் செல்லுபடியாகும்.

இந்த நிலையில் கர்நாடக  சட்டசபைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் அணி அறிவித்திருந்தது. ஆனால் நாங்கள் போட்டியிட மாட்டோம், பாஜகவை ஆதரிப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அறிவித்தது. ஆனால் திடீரென எடப்பாடி தரப்பில் அன்பரசன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பெங்களூரு புலிகேசி நகர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று அதிமுக தரப்பு அறிவித்தது.

மறுபக்கம் பெங்களூரில்  புலிகேசி நகர், காந்தி நகர் என இரு தொகுதிகளிலும் கோலார் தங்கவயல் தொகுதியிலும் ஓபிஎஸ் வேட்பாளர்களை அறிவித்தார்.  இதில் புலிகேசி நகரில் ஓபிஎஸ் அணி வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டது.  காந்திநகர், கோலார் தங்கவயல் தொகுதிகளில் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதை விட ஆச்சரியமாக, காந்திநகர் ஓபிஎஸ் அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. 

உடனடியாக கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி, நாங்களே அதிமுக. எங்களது வேட்பாளர்களைத் தவிர வேறுயாருக்கும் இரட்டை இலை சின்னத்தைத் தரக் கூடாது என்று எதிர்ப்பைப் பதிவு செய்தார்.  இப்படி அனல் பறக்க குழப்பங்கள் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் தனது வேட்பாளர்களைத் திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கே சொந்தம் என்று தீர்ப்பு வந்து விட்ட பின்னர் அதிமுகவின் அடையாளங்களை பயன்படுத்தினால் பெரும் சட்டச் சிக்கலில் சிக்க நேரிடும் என்பதால்தான் ஓபிஎஸ் தரப்பு பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இப்படித்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத் தேர்தலிலும் கடைசி நேரத்தில் பின்வாங்கினார்கள். இப்போதும் பல்டி அடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்