புதுச்சேரி: தூத்துக்குடி மக்களின் துயரத்தைக் கண்டு துயருற்று துடிதுடித்துக் கொண்டிருக்கும் மக்களின் குரலாய்ப் பேசியதற்காக தன்னை குத்திக் கிழித்து காயப்படுத்தி வருவோரின் ஆணவ சாம்ராஜ்ஜியம் சரியப் போகிறது.. உங்களின் சரியும் சரித்திரத்தை எழுதத் தயார் என்று புதுச்சேரி துணை நிலை மற்றும் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் ஆவேசமாக கூறியுள்ளார்.
இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழிசை செளந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் ஏராளமான பாஜகவினரும் உடன் சென்றிருந்தனர். பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து விட்டது. திாரவிட மாடல் திண்டாடும் மாடலாகி விட்டது என்று காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழிசை ஆளுநராக இருக்கிறார். அவர் அந்த வேலையை மட்டும் பார்க்கட்டும். அரசியல்வாதியாக ஆசைப்படுகிறார் என்றால் தூத்துக்குடி மக்கள் ஏற்கனவே அவருக்கு பரிசளித்து விட்டனர் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மிகவும் ஆவேசமாக ஒரு டிவீட் போட்டுள்ளார் ஆளுநர் தமிழிசை. அந்த டிவீட்:
தூத்துக்குடி மக்களின் துயரத்தைக்கண்டு துயருற்று துடிதுடித்து மக்களின் குரலாய் பேசியதற்கு...
திண்டாடும் மாடலை வைத்து.... திண்டாடிக் கொண்டிருப்பவர்கள்,என்னை சமூக வலைதளங்களில் குத்திக்கிழித்து தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி எக்காளமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்...
அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப்போகிறது... சரியப்போகிறது...
இது சபதம்!
அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள்...
ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்...
(தி)க்கு (மு)க்காடி (க)ளித்துக் கொண்டிருப்பவர்கள் ஆடி ஒடுங்குவதையும் அங்கு பார்ப்பேன்....எவ்வளவு வேண்டுமானாலும் சமூக வலைத்தளங்களில் காயப்படுத்துங்கள்....
சமூகத்திலும் காயப்படுத்துங்கள்.....
அந்த ரத்தத்தில் தோய்த்து....
நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார்.....
இது அப்பழுக்கற்ற பொது வாழ்வில் வாழும் ஒரு பெண்ணின் சபதம் என்று காட்டமாக கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.
திமுகவினர் குறித்து மறைமுகமாக டாக்டர் தமிழிசை போட்டுள்ள இந்த டிவீட்டும், சபதம் ஏற்பதாக அவர் கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}