ஹைதராபாத்: தெலங்கானாவில் கணவனைக் காதலித்த மாற்றுத்திறனாளி பெண்ணை, அவருக்கே திருமணம் செய்து வைத்து ஆசிர்வதித்துள்ளார் ஒரு மனைவி. இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனைவியா என்று பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
மஹபூபாபாத் மாவட்டம் சின்னகூடுரு மண்டலம் உக்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சரிதா என்னும் பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. சுரேஷ்-சரிதா தம்பதியினர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த சுரேஷ்- சரிதா வாழ்க்கையில் குறுக்கிட்டார் சுரேஷின் மாமன் மகள் சந்தியா. அவர் ஒரு மாற்றுத் திறனாளி.
தனது மாமாவை காதலிப்பதாக, சந்தியா இது குறித்து சரிதாவிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து கணவரிடம் விசாரித்த சரிதா, தனது கணவரும் சந்தியாவைக் காதலிப்பதை அறிந்தார். இருவரும் காதலிப்பதை அறிந்து கொண்ட சரிதா, சற்றும் யோசிக்காமல் இருவருக்கும் மணம் முடித்து வைக்க முடிவெடுத்தார். சந்தியாவின் நிலையை உணர்ந்து இந்த முடிவுக்கு அவர் வந்தார். இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் கோயிலில் வைத்து, சந்தியாவுக்கும் தனது கணவருக்கும், மனைவி சரிதாவே முன்னின்று திருமணம் முடிந்து வைத்துள்ளார்.
இது குறித்து சரிதா கூறுகையில், மாற்று திறனாளியான சந்தியா என்னுடைய கணவர் மீது ஆசைப்பட்டார். மனிதாபிமானத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தேன். முக்கியமாக, மாற்றுதிறனாளியான சந்தியாவை நல்லபடியாக பார்த்து கொள்ளவே என்னுடைய கணவருக்கு திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த திருமணம் சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. பலர் சரிதாவை புகழ்ந்தும், அதேசமயம், பலர் சரிதாவின் செயலை நினைத்து வருத்தம் தெரிவித்தும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாண்டண்ணா கதையையும் படிச்சுட்டுப் போங்க
இதே போல ஆந்திர மாநிலத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இந்தக் கதை ரொம்ப வித்தியாசமானது.
ஆந்திர மாநிலம் அல்லூரீ சீதாராம ராஜூ மாவட்டம் கின்சூரு பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவருக்கு கடந்த 2000ம் ஆண்டில் சாகேனி பர்வதம்மாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வது திருமணம் செய்ய முடிவு செய்த பாண்டண்ணா, இதுகுறித்து மனைவி பர்வதம்மாவிடம் சொல்லியிருக்கிறார். முதல் மனைவியே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் முடித்து வைத்துள்ளார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 2007ல் இந்தத் திருமணம் நடந்ததாம்.
பாண்டண்ணாவிற்கு தற்போது 17 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் பாண்டண்ணாவிற்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. தனது 2 மனைவிகளிடம் அதை கூறியுள்ளார். 2 மனைவிகளுக்கும் தற்போது குழந்தை பெற்று கொள்ள முடியாது என்பதால், அதே ஊரில் வசிக்கும் ஒரு பெண்ணையும் திருமணம் செய்து வைத்துள்ளனர் 2 மனைவிகள். கடந்த ஜூலை மாதம் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
பாண்டண்ணா.. போதும்ண்ணா.. பூமி தாங்காது.. அண்ணாவுக்கு மேலும் மேலும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வராமல் இருக்க அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம்!!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}