அச்சோ.. ரேகா போஜ் சொன்னதைக் கேட்டீங்களா.. இந்தியா கப் வென்றால்.. இப்படி பண்ணுவாங்களாமே!

Nov 18, 2023,05:47 PM IST

ஹைதராபாத்: இந்தியா உலகக் கோப்பையை வென்றால், விசாகப்பட்டனம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று தெலுங்கு நடிகை ரேகா போஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளன.


இதில் இந்தியா இதுவரை 2 முறை ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலியா 5 முறை உலகக் கோப்பையை வென்ற அணியாகும். உலகக் கோப்பையை அதிகம் வென்ற அணி ஆஸ்திரேலியாதான். இந்த முறை ஆஸ்திரேலியா அணி சில தோல்விகளைச் சந்தித்து பின்னரே இறுதிப் போட்டி வரை முன்னேறி வந்துள்ளது.




மறுபக்கம், இந்தியா  தான் ஆடிய அனைத்து சுற்றுப் போட்டிகளிலும் அட்டகாசமாக வெற்றி பெற்றது. அதேபோல அரை இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியை பிரமாதமாக வீழ்த்திய பிறகே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தத் தொடரில் இந்தியா மட்டுமே ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத ஒரே அணியாகும்.


இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு நடிகை ரேகா போஜ் என்பவர் கூறியுள்ள அதிரடி ஸ்டேட்மென்ட் பலரையும் நடுங்க வைத்துள்ளது. தெலுங்கில் கவர்ச்சிகரமான ரோல்களில் நடித்து வருபவர்தான் ரேகா போஜ்.  மாங்கல்யம், கலயச தஸ்மய் நமஹ, டாமினி வில்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் போட்டிருந்தார்.


அதில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால் விசாகப்பட்டனத்தில் நிர்வாணமாக வலம் வர தயாராக இருக்கிறேன் என்று கூறியிரு்நதார். இது  அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. பலர் இதைக் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தனர். சிலர் நாங்க பார்க்க ரெடி என்று குசும்பாக  கூறியிருந்தனர்.


இப்படித்தான் 2011ம் ஆண்டு பூனம் பாண்டேவும், இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறியிருந்தார். அதுவும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் தனது டிவீட் குறித்து ரேகா கூறுகையில், இந்தியா மீதான அன்பு, இந்திய அணி மீதான நம்பிக்கை காரணமாகத்தான் அப்படிக் கூறினேன். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. இதை தவறாகப் பார்க்காதீர்கள் என்று விளக்கியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்