சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக இருக்கும். வானிலையில் எந்த மாற்றமும் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக கோடை மழை பரவலாக கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் அணைகள், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. கோடை காலத்திலும் நல்ல மழை பெய்ததால் இந்த வருடம் சாகுபடி காலத்தில் தண்ணீருக்கு பஞ்சம் வராது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது மழை அளவு குறைந்து வெயில் தலை தூக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தகித்து வருகின்றனர்.
வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், பஞ்சாப், சட்டீஸ்கர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை நாளை மறுநாள் வரை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும். அப்போது வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு 105 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் கொளுத்தியது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், தஞ்சாவூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் சுட்டெரித்து. மதுரை மற்றும் கடலூரில் தலா 101 டிகிரி ஃபாரின்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}