சென்னை: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக இருக்கும். வானிலையில் எந்த மாற்றமும் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக கோடை மழை பரவலாக கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் அணைகள், நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. கோடை காலத்திலும் நல்ல மழை பெய்ததால் இந்த வருடம் சாகுபடி காலத்தில் தண்ணீருக்கு பஞ்சம் வராது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் தற்போது மழை அளவு குறைந்து வெயில் தலை தூக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தகித்து வருகின்றனர்.

வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், பஞ்சாப், சட்டீஸ்கர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை நாளை மறுநாள் வரை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும். அப்போது வெப்பநிலை 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு 105 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் கொளுத்தியது. வேலூரில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், தஞ்சாவூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் சுட்டெரித்து. மதுரை மற்றும் கடலூரில் தலா 101 டிகிரி ஃபாரின்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}