முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

Jan 29, 2026,05:58 PM IST

சென்னை: தமிழகத்தின் முக்கிய ஆன்மீகத் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 1-ம் தேதி கோலாகலமாகத் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கும், முக்கிய முருகன் கோவில்களுக்கும் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


ரயில் விவரங்கள்:


1. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (06001/06002):


ஜனவரி 30 (வெள்ளிக்கிழமை) இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:15 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

மறுமார்க்கத்தில், பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10:35 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, திங்கள் காலை 09:30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயிலில் 18 ஏசி மூன்று அடுக்கு (3-Tier AC) பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.




2. தாம்பரம் - தூத்துக்குடி சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (06003/06004):


ஜனவரி 31 (சனிக்கிழமை) இரவு 11:50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:00 மணிக்கு தூத்துக்குடியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11:55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, திங்கள் காலை 11:30 மணிக்கு சென்னை கடற்கரை (Beach) நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலில் ஏசி சேர் கார் மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் இருக்கும்.


3. மதுரை - பழனி முன்பதிவில்லா சிறப்பு ரயில்: 


பழனி தைப்பூச விழாவிற்காக பிப்ரவரி 1-ம் தேதி காலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து பழனிக்கும், மதியம் 2:25 மணிக்கு பழனியில் இருந்து மதுரைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.


இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 29, வியாழக்கிழமை) மதியம் 2:15 மணி முதல் தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் வாயிலாகத் தங்களது பயணத்தைச் சீட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த அறிவிப்பு தைப்பூசத்திற்குச் சொந்த ஊர்களுக்கும், கோயில்களுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ள பக்தர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்