ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில், 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஜார்க்கண்டில் உள்ள கிரித், தன்பாத், ராஞ்சி, ஜம்ஷெட்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் உத்திரப்பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8, டில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. இந்த தேர்தலில் காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று நடைபெறும் ஆறாவது கட்ட தேர்தலில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சாக்ஷியும் வாக்களித்தார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான கவுதம் கம்பீர், கபில்தேவ் ஆகியோர் டெல்லியில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதில் கம்பீர் தற்போதைய சிட்டிங் எம்பி ஆவார். ஆனால் அவருக்கு மீண்டும் பாஜக சீட் தரவில்லை. இதனால் அரசியலை விட்டு அவர் விலகி விட்டது நினைவிருக்கலாம்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!
டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!
நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி
கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?
சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்
குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
{{comments.comment}}