ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில், 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஜார்க்கண்டில் உள்ள கிரித், தன்பாத், ராஞ்சி, ஜம்ஷெட்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் உத்திரப்பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8, டில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. இந்த தேர்தலில் காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று நடைபெறும் ஆறாவது கட்ட தேர்தலில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சாக்ஷியும் வாக்களித்தார்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான கவுதம் கம்பீர், கபில்தேவ் ஆகியோர் டெல்லியில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதில் கம்பீர் தற்போதைய சிட்டிங் எம்பி ஆவார். ஆனால் அவருக்கு மீண்டும் பாஜக சீட் தரவில்லை. இதனால் அரசியலை விட்டு அவர் விலகி விட்டது நினைவிருக்கலாம்.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}