ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓட்டுப் போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில், 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்து, இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஜார்க்கண்டில் உள்ள கிரித், தன்பாத், ராஞ்சி, ஜம்ஷெட்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் உத்திரப்பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகார், மேற்கு வங்கத்தில் தலா 8, டில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜம்மு-காஷ்மீரில் 1 தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. இந்த தேர்தலில் காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று நடைபெறும் ஆறாவது கட்ட தேர்தலில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சாக்ஷியும் வாக்களித்தார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான கவுதம் கம்பீர், கபில்தேவ் ஆகியோர் டெல்லியில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதில் கம்பீர் தற்போதைய சிட்டிங் எம்பி ஆவார். ஆனால் அவருக்கு மீண்டும் பாஜக சீட் தரவில்லை. இதனால் அரசியலை விட்டு அவர் விலகி விட்டது நினைவிருக்கலாம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}