சென்னை : ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 படம் பற்றிய புதிய ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த சூடு கொஞ்சமும் குறையாமல் சோஷியல் மீடியாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. படம் எந்த அளவிற்கு ஹிட்டாகி, வசூலை வாரி குவித்ததோ அதை விட பல மடங்கு புகழை சேர்த்து உலகம் முழுவதம் செம ஹிட் அடித்து விட்டது தமன்னா ஆடிய காவாலா பாடல். ஜெயிலர் படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள் இன்னும் முடியாத நிலையில் ரஜினியின் அடுத்தடுத்த படங்களின் மீது தற்போது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது.

ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார் என ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்தில் துவங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். அதுவும் வெல்லயானி விவசாய கல்லூரியில் தான் இந்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அதோடு மற்றொரு தகவலாக இந்த படத்தில் ரிதிகா சிங்கும் ரஜினியுடன் இணைந்து நடிக்க போகிறாராம்.
ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய அளவில் பேசப்பட்ட டைரக்டரான டி.ஜே.ஞானவேல், ரஜினியை வைத்து படம் இயக்குகிறார் என்றதுமே படத்தின் கதை என்னவாக இருக்கும் என அனைவரும் ஆராய்ச்சியே செய்ய துவங்கி விட்டனர். இந்த படத்திலும் ரஜினி போலீஸ் அதிகாரி வேடத்தில் தான் நடிக்கிறார் என்று வேறு ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்தில் இன்னொரு போலீஸ் கேரக்டரில் தான் ரிதிகா சிங் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் தவிர இந்த படத்தில் மஞ்சு வாரியரும் நடிக்கிறாராம். இவர் ரஜினியின் மனைவி கேரக்டரில் நடிக்கிறாராம். ஃபகத் ஃபாசிலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அது உறுதி செய்யப்படவில்லை. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் தான் படமாக்கப்பட உள்ளதாம். இதுவும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை தான் என சொல்லப்படுகிறது.
சும்மாவே ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் தலைவர் 170 பற்றி இவ்வளவு தகவல்கள் வெளி வந்தால், அதுவும் ஷூட்டிங் இந்த வாரமே துவங்கப்பட உள்ளதால் சோஷியல் மீடியாவில் #Thalaivar170 என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி தீயாய் பரவ விட்டுள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}